Super Singer: மீண்டும் சூப்பர் சிங்கரில் நுழைந்த பிரியங்கா... சசிகுமாருடன் செய்த காரியம்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி நிகழ்ச்சியை விட்டு சென்றுவிட்டதாக கூறிய நிலையில், தற்போது மாஸ் எண்ட்ரி கொடுத்து தனது சேட்டையை ஆரம்பித்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த மேடையில் மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. '
அந்த வகையில் கடந்த வாரம் இறுதி சுற்றுக்கான போட்டி நடைபெற்ற நிலையில், இந்த வாரம் இரண்டாவதாக ஃபைனலிஸ்ட்க்கு செல்ல போட்டியாளர்கள் தயாராகியுள்ளனர்.
இந்நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கிய நிலையில், அவர் சமீபத்தில் திருமணம் செய்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சிக்கு பிரேக் விட்டிருந்தார்.
ஆனால் ரசிகர்கள் நிரந்தரமாக சென்றுவிட்டதாக நினைத்த நிலையில், தற்போது மாஸ் எண்ட்ரி கொடுத்து தனது சேட்டையை ஆரம்பித்துள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |