2 குழந்தைளை பெற்ற பின்னும் குறையாத அழகு... ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் பிரணிதா!
நடிகை பிரணிதா ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் கடைசியாக அதர்வா முரளிக்கு ஜோடியாக ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் ஒரு சில படங்களில் மாத்திரமே நடித்திருந்தாலும் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள்.
தனது நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான நித்தின் ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
சமூக வளைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் பிரணிதா தற்போது ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |