விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு

Dhanush Nayanthara Vignesh Shivan Marriage Netflix
By Dhushi Jan 23, 2025 04:09 AM GMT
Report

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கின் முடிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தனுஷ்- நயன்தாரா

பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகளின் திருமண காட்சிகள் வெளியானது.

Baakiyalakshmi: கோபியிடமிருந்து ஒதுக்கப்படும் ராதிகா... சுற்றுலா செல்லும் இடத்தில் நடப்பது என்ன?

Baakiyalakshmi: கோபியிடமிருந்து ஒதுக்கப்படும் ராதிகா... சுற்றுலா செல்லும் இடத்தில் நடப்பது என்ன?

அதற்கு முன்னராக இந்த ஆவணப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அதில், நானும் ரௌடி தான் படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்பு காட்சிகள் இருந்தது. இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதனை தொடர்ந்து தனுஷ் அனுப்பிய அந்த நோட்டீஸுக்கு எதிர்வினையாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும் அவரது கணவர் விக்னேஷ் சிவன், அந்த மூன்று நிமிட படப்பிடிப்பு வீடியோவை இலவசமாகப் பாருங்கள் என்று தனது இஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்திருந்தார். அத்துடன் நிறுத்தாமல் வெளியாகியிருந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் 20 வினாடிக்கு மேலாக வைக்கப்பட்டிருந்தது.

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

இவற்றை பொறுமையாக பார்த்து கொண்டிருந்த தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், அனுமதியின்றி நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகளை பயன்படுத்தியதாக நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்கள்.

அந்த மனுவில் எதிர் மனுதாரராக நயன்தாரா- விக்னேஷ் சிவன் மற்றும் நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்பு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்ததோடு, எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இறுதி முடிவு

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

இந்த நிலையில், இதுவரை நடந்த விசாரணையில் எதிர் மனுதாரர்களின் பதிலுக்கு தனுஷ் தரப்பு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனிடையே தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நெட் ஃபிலிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

Ethirneechal: இந்த ட்ராமா பண்ற வேலையை வச்சிக்காத... ஈஸ்வரியை மோசமாக நடத்தும் தர்ஷன்

Ethirneechal: இந்த ட்ராமா பண்ற வேலையை வச்சிக்காத... ஈஸ்வரியை மோசமாக நடத்தும் தர்ஷன்

இந்த வழக்கு நேற்றைய தினம் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நெட் ஃபிலிக்ஸ், தரப்பில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று வாதிடப்பட்டது.

மேலும் தனுஷின் அலுவலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ அல்லது நெட்ஃபிலிக்ஸ் நிறுவன அலுவலகம் அமைந்துள்ள மும்பையிலோ தான் தொடர முடியும் எனவும் கூறப்பட்டது.

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

இதனை தொடர்ந்து தனுஷ் தரப்பு, “படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது சென்னையில் இருக்கும் அலுவலகத்தில் தான்..” என வாதிட்டது. இப்படியாக இரு தரப்பும் தங்களின் வாதங்களையும் முன் வைக்க, இவற்றையெல்லாம் பொறுமையாக கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இதற்கான நிலையான ஒரு தீர்மானம் எப்போது வரும் என்பதனை காண இரு தரப்பு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.   

விசாரணைக்கு வந்த தனுஷ்- நயன்தாரா விவகாரம்.. உயர் நீதிமன்றம் எடுத்த முடிவு | Dhanush Nayanthara Case Court Order

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US