சாண்ட்ராவுக்கு எதிராக வார்த்தையை விட்ட கனி.. நியாயம் கேட்ட இடத்தில் நடந்த மோதல்
பிக்பாஸ் வீட்டில் சாண்ட்ராவுக்கு எதிராக பேசிய கனி, நியாயம் கேட்ட போது மாற்றி பேசிய சம்பவம் பெரிய கலவரமாக உருவெடுத்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் 12 வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன், ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
சாண்ட்ரா- கனி பஞ்சாயத்து
இந்த நிலையில், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்து ரம்யா ஜோ, வியானா இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுடன் நண்பியாக இருந்த சாண்ட்ரா தனிமையாக்கப்பட்டுள்ளார்.
சாண்ட்ரா கடந்த நாட்களாக விக்ரமிடம் புலம்பிய காட்சிகளை காட்டப்பட்டது. அவர் கனியிடம் சாண்ட்ரா நடந்து கொள்ளும் விதத்தை பகிர்ந்துள்ளார். அப்போது கனி, “சாண்ட்ரா வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் தன்னை பற்றி பேச வேண்டும் என்பதற்காக இதுபோன்று நடந்துக் கொள்கிறார். அவர் அனைத்திற்கு அழுவது சரியானது அல்ல..” எனக் கூறுகிறார்.

இது குறித்து சாண்ட்ரா கேட்ட போது, “ என் குழந்தைகள் மீது சத்தியமாக நான் அப்படி பேசவில்லை. வீணாக பலி போட வேண்டாம். நான் அப்படி கூறவில்லை..” என அடித்து பேசியிருக்கிறார்.
இருவரும் மாறி மாறி குறை கூறிய காட்சிகள் ப்ரோமோக்களாக வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள்,“வார இறுதியில் இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி பேசுவாரா?” என கேள்வி எழுப்பும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |