வீட்டில் ஒதுக்கப்பட்ட வியானா.. மனம் உடைந்த கொடுத்த பேட்டி
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக விளையாடிய வியானா, வீட்டிற்கு சென்ற பின்னர் மனம் உடைந்து பேசிய பேட்டியொன்றில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் 12 வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன், ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
மனம் உடைந்து போன வியானா
இந்த நிலையில், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்து ரம்யா ஜோ, வியானா இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேறிய பின்னர், ரம்யா ஜோ மற்றும் வியானா கொடுக்கும் பேட்டிகள் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வியானா கூறுகையில், “ என்னுடைய வீட்டிலுள்ளவர்கள் கோபமாக இருந்தார்கள். தொலைபேசியின் ரகசிய எண்ணை மறந்து விட்டேன். அதனை நான் ஒரு ஓரமாக அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் அம்மா ஜாடையாக சில வார்த்தைகள் பேசுவார்கள். இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறேன்..” என பேசியிருந்தார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |