Bigg Boss 9: சுருண்டு விழுந்த போட்டியாளர்.. டாஸ்க்கை விட்டு வெளியேற்றப்படுவாரா?
இன்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் மாஸ்க்கை எடுக்க ஓடிய போட்டியாளர் ஒருவர் சுருண்டு விழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
டாஸ்க் நடுவே சுருண்டு விழுந்த பிரபலம்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் நாமினேஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இஷ்டத்திற்கு விளையாடிய போட்டியாளர்களை விஜய் சேதுபதி கடந்த வாரம் வறுத்தெடுத்திருப்பார். வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, மாஸ்க்கை எடுத்து உரிய பெட்டியில் வைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதில் கானா வினோத் காலில் அடிப்பட்டு விடுகிறது. இதனால் அவரால் அந்த டாஸ்க்கை முழுமைப்படுத்த முடியவில்லை. இதனை சாக்காக வைத்து மற்ற போட்டியாளர்கள் அவரை தோற்கடிக்க முயற்சி செய்வார்கள். இதிலிருந்து பிரச்சினை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி, சூடுபிடிக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |