இன்று சூப்பர் சிங்கர் வின்னர் யார் ? இலங்கை குயிலுக்கு கிடைத்த அங்கீகாரம்
பிரபல டிவியின் இசை நிகழ்ச்ச்சியான சூப்பர் சிங்கரில் இன்று இறுதிச்சுற்று நடைபெற்று வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
'சூப்பர் சிங்கர் சீசன் 11' வின்னர்
பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 11 அதன் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் இன்று வின்னர் யார் என்பது தெரிய வரும்.
கடந்த 6மாத காலங்களுக்கு மேலாக மக்கள் மனதை கவர்ந்த இந்த இசை நிகழ்ச்சியில் இன்று 7 இறுதிச்சுற்று போட்டியாளர்களில் ஒரு போட்டியாளர் வெற்றி மகுடம் சூடுவார்.

இதனை தொடர்ந்து இறுதி சுற்றுக்கு தேர்வாகிய அனைவரும் மிக திறமையாக பாட கூடிய போட்டியாளர்கள். இதில் யார் வெற்றியாளராகப்போகிறார் என தற்போது மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2025 ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிய இந்த சீசனில், சுமார் 24 போட்டியாளர்கள் தங்களின் இசைப் பயணத்தைத் தொடங்கினர்.
பல்வேறு சுற்றுகள், கடுமையான போட்டிகள் மற்றும் நடுவர்களின் கண்டிப்பான மதிப்பீடுகளுக்குப் பின்னர் தற்போது 7 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலினி, சரண், தர்ஷனா மற்றும் ஆப்ரகாம் ஆகியோரே இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர்கள்.

'இலங்கை குயில்'
இந்த சீசனில் தற்போது இறுதிச்சுற்றுக்கு தெரிவான போட்டியாளர்களில் மிகவும் கவனிக்க தக்க போட்டியாளர் என்றால் அவர் இலங்கையை சேர்ந்த திஷாதனா தான்.
இவர் தன் இசை திறமையால் பல போராட்டங்கள் மத்தியில் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றி தற்போது இறுதிச்சுற்றுக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இவரின் பாடல் திறமையால் "இலங்கை குயில்" என்ற பெயரும் ரசிகர்களிடையே சூட்டப்பட்டுள்ளது. அதே வேளையில், நிகில் மற்றும் மீனாட்சி ஆகியோரின் பாடல்களும் சமூக வலைதளங்களில் மக்களிடையே வைரலாகி வருகின்றது.

பரிசுகளும் எதிர்காலமும்
இந்த இசை நிகழ்ச்சியில் வெற்றியாளருக்குக் கிடைக்கப்போகும் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் வெற்றிப் கோப்பை ஒருபுறம் இருக்க இதில் மிகப்பெரிய பரிசாக திரையுலகில் பின்னணிப் பாடகராக நுழைவதற்கான வாய்ப்பு இந்த மேடை மூலம் அவர்களுக்கு கிடைக்கும்.
முந்தைய சீசன்களில் வெற்றி பெற்ற பல பாடகர்கள் இன்று ஏ.ஆர். ரகுமான், அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனின் வெற்றியாளர் தற்போது யார் என்பது எதிர்பார்பாபக உள்ளது.
யார் இந்த சீசனின் மகுடத்தைச் சூடப்போகிறார்கள் என்பது இன்று நடைபெறும் கிராண்ட் பினாலேவில் தெரியவரும். கடின உழைப்பும் தனித்துவமான குரல் வளமும் கொண்ட ஒருவருக்கு இந்த அங்கீகாரம் கிடைப்பது நிச்சயம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |