இந்த ராசியினர் தடைகளையும் வலிகளையும் சாதனையாக மாற்றுவார்களாம்... உங்க ராசியும் இதுவா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்வில் இன்பமும் துன்பமும் இயல்பானது. அனைவருமே ஒரு முறையேனும் கடினமாக காலகட்டத்தை கடந்து தான் ஆக வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் வாழ்வில் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்நம்பிக்கையை விடவே மாட்டார்களாம்.
அடிப்படி வலிகளையும் தடைகளையும் கடந்து வாழ்வில் சாதனை படைக்கும் ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தின் கிரகமான சனிபகவானால் ஆளப்படுவதால், இவர்களின் வாழ்வில் நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்த ராசியினர் தங்களுக்கு வலிகளை கொடுத்தவர்களுக்கும் துரோகம் செய்தவர்களுக்கு தங்களின் வெற்றியால் பதில் சொல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களை சுற்றி இருக்கும் அனைவரும் இவர்களின் வளர்ச்சியை தடுக்க முயன்றாலும் தனிஒருவராக நின்று வாழ்வில் சாதித்துகாட்டு தைரியம் இவரை்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் நெருப்பில் குதித்தாலும் தங்களை தங்கமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்வர்கள்.
இவர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் தங்களின் தன்னம்பிக்கையை இழக்கவே மாட்டார்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அழுத்தம் என்பது புதியது அல்ல. இவர்கள் வலிகளை சுமந்துககொண்டே வாழ்வில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் போர் மற்றும் தைரியத்தின் கிரகமாக செவ்வாயால் ஆளப்படுவதால், இயல்பிலேயே இவர்களிடம் அசாத்திய தைரியம் இருக்கும்.
இவர்கள் தங்கள் சுறுசுறுப்பான ஆற்றல் மற்றும் அச்சமற்ற மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு வலிகளை கொடுத்து வளர்ச்சியை தடுப்பது மிகவும் கடினமாக காரியமாக இருக்கும். இவர்கள் தங்களின் வலிகளை சாதனைகளாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |