இறுதிவரை ஒத்துக்கொள்ளவே இல்லை... நயன்தாரா குறித்து வெளிப்படையாக பேசிய யோகி பாபு!
நயன்தாரா குறித்து யோகிபாபு பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ள விடயம் தங்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
யோகி பாபு
நகைச்சுவை நடிகர் யோகி பாபு கோலிவுட்டில் முக்கிய காமெடியன்களில் ஒருவராக வலம் வருகின்றார்.
தற்போது அஜித், விஜய், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் குறுகிய காலத்திலேயே இடம்பிடித்த இவருக்கு மிகப்பெரும் ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
இவர் நடிப்பில் வெளியான கூர்கா திரைப்படம் கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது Medical Miracle, ராஜா சாப், ஜெயிலர் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் யோகி பாபு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடித்த அனுபவம் தொடர்பில் வெளிப்படையாக பேசியிருக்கின்றார்.
அந்த படத்தில் ஒரு காட்சியில் யோகி பாபுவின் முகத்தில் நயன்தாரா காலை வைப்பது போன்ற காட்சி இடம்பெற இருந்தாம். யோகி பாபுவை அவமானப்படுத்துவதாக கருதி, நயன்தாரா அக்காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ஒத்துக்கொள்ளவே இல்லை
இதுகுறித்து யோகி பாபு குறிப்பிடுகையில், நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவர் ஒரு காமெடி ஆக்டருடன் நடிப்பதே பெரிய விஷயம்.படத்தில் காதல் வசனம் எல்லாம் பேச வேண்டும்.
அந்தப் படத்தில் ஒரு காட்சியில் அவரது காலை என் முகத்தில் வைக்க வேண்டும். ஆனால், இதற்கு நயன்தாரா ஒத்துக்கொள்ளவே இல்லை.
பின்னர் நானும், நெல்சன் திலீப்குமாரும் சொல்லி அந்தக் காட்சிக்கு ஒத்துகொண்டார். அப்படி இருந்தும் அவர் என் முகத்தின் மீது கால் வைக்கவே இல்லை" என குறிபி்ட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |