விலங்குகளுக்கு தனி மலை ஒதுக்கிக் கொடுத்த நாடு- Fox village எங்குள்ளது தெரியுமா?
பொதுவாக செல்லபிராணிகள் விரும்பி வளர்ப்பவர்கள் அதிகமான நாய்களை ஒன்றாக வளர்க்கமாட்டார்கள்.
நாம் ஆசைக்காக வளர்க்கும் விலங்குகள் காலப்போக்கில் நம் உயிரை கூட பறித்து விடலாம். இப்படி இருக்கும் பட்சத்தில் உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் நாடு ஒன்றில் நரிகளுக்கு ஒரு கிராமம் ஒதுக்கிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.
அந்த கிராமம் முழுவதும் ஏராளமான நரிகள் அங்கும் இங்கும் சுதந்திரமாகத் திரியுமாம். இதனை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் படையெடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், நரிகளுக்கு தனி கிராமம் அமைத்து கொண்ட நாடு எங்குள்ளது என்பதையும், அதிலுள்ள சிறப்புக்களையும் பதிவில் பார்க்கலாம்.
நரிகள் வாழும் கிராமம்
ஜப்பானின் ஷிரோஷி நகரத்தில் உள்ள ஜோவா மலைக்கு (Mt. Zoa) அருகில் நரிகள் வாழும் கிராமம் அமைந்துள்ளது. இந்த மலையிலும் கிராமத்திலும் மாறி மாறி சுமார் 100 நரிகள் வாழ்கின்றன.
இந்த மலையில் பாதி மலை வனவிலங்காகவும், பாதி மலை அங்கு வாழும் கிராம மக்களுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலையில் வாழும் விலங்குகள் எந்தவிதத்திலும் துன்பம் விளைவிக்காது. ஆனாலும், நரிகளிடம் செல்லும்போது பாதுகாப்பு விதிகள் விதிக்கப்படும்.
குட்டி நரிகள் முதல் பெரிய நரிகள் வரை ஆங்காங்கே ஓடிக்கொண்டும், அங்கு வசிக்கும் மக்களிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்கும். அந்த கிராமம் பார்ப்பதற்கு விலங்கியல் பூங்கா போன்று இருக்கும்.
இந்த கிராமத்தில் உள்ள நரிகளை யாரும் அடைத்து வைக்கமாட்டார்கள். ஆனாலும் நரிகளை மனிதர்களை தொடக்கூடாது என்ற விதி உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் உணவு நரிகளுக்கு உணவு கொடுக்க முடியும். மற்ற இடங்களில் கொடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.
காலணிகளுக்கு தடை
மாறாக நரிகளை பார்ப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகளின் காலணியை கடிப்பதால், காலணி அணிந்துச் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அப்படியொரு நாள் பயணியொருவரின் காலணியை கடித்து அதில் ஒரு துண்டை விழுங்கியதால் நரியொன்று இறந்து விட்டது. இதன் பின்னர் அங்கு செல்பவர்களுக்கு காலணி தடைச் செய்யப்பட்டுள்ளது.
வருடம் முழுவதுமே இந்த இடத்திற்கு சென்று பார்க்கலாம். அதிலும் குறிப்பாக குளிர்க்காலத்தில் பனி விழும் மலையைப் பார்க்க அவ்வளவு அழகாகவும், அமைதியாகவும் இருக்கும்.
நரிகள் இருக்கும் அளவுக்கு ஆடுகளையும் இந்த பகுதியில் காணலாம். ஜப்பான் செல்லும் முடிவில் உள்ளவர்கள் இங்கு சென்று குடும்பத்தினருடன் மகிழலாம்.
மக்களின் நம்பிக்கை
அந்த கிராமத்தில் வாழும் மக்களின் பெண் கடவுள் ஒருவரின் தூதுவர் நரி என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் வாழ்வதை அவர்கள் நல்ல சகுணமாக பார்க்கிறார்கள்.
அதே போன்று சில கோயில்களில் நுழைவாயிலில் நரிகளை பார்க்கலாம். நரிகளினால் ஏற்படும் தொந்தரவுகள் கூட வரமாக பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |