இந்த ராசியினரை அழ வைப்பது யாராலும் முடியாத காரியமாம்... ஏன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை,பொருளாதாரம், திருமண வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் வைராக்கியமான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எவ்வளவு சோகம் இருந்தாலும், மற்றவர்களின் முன்னிலையில், அழுவதை விரும்பவே மாட்டார்கள்.
அப்படி மற்றவர்களின் முன்னிலையில், அழுதுவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தைரியசாலிகளாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள்.
அவர்களின் வேலை எவ்வளவு வெறுப்பூட்டினாலும் அல்லது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அவர்கள் முற்றிலும் அதை தள்ளிவைத்துவிட்டு மற்றவர்கள் முன்னிலையில், மகிழ்சியை மட்டுமே வெளிப்படுத்துவார்கள்.
அழுவது தனிப்பட்ட விடயம் என்று மகர ராசிக்காரர்கள் நம்புகிறார்கள், இதனால் மற்றவர்கள் பாதிக்கப்பட கூடாது என்ற குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் அதிக உணர்திறன் மிக்கவர்களாக அறியப்படுகின்றார்கள். இருப்பினும் அதை மற்றவர்களுக்கு ஒருபோதும் தெரியப்படுத்த மாட்டார்கள்.
இவர்கள் மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களின் தனிப்பட்ட விடயங்களை நெருங்கியவர்களிடம் கூட முழுமையாக பகிர்ந்துக்கொள்ள மாட்டார்கள்.
இந்த ராசியினரின் உணர்வுகளை நீங்கள் எவ்வளவு காயப்படுத்தினாலும் அல்லது அவர்களை கோபப்படுத்தினாலும், மற்றவர்கள் ஏற்படுத்திய வலியை அவர்கள் துடைத்துவிட்டு, முற்றிலும் பதட்டமின்றி செயல்படுவார்கள்.
கன்னி
கன்னி ராசியினர் இயல்பாகவே தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் மிகவும் தெளிவான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கண்ணீரைத் தவிர்த்து,மலர்ச்சியான முகத்தை வைத்திருப்பார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் தங்களுக்கு உணர்வுகள் இருப்பதையும், ஏதோவொன்றால் உணர்ச்சிவசப்படுவதையும் வேறு யாரும் பார்க்க அனுமதிக்க முடியாத அளவுக்கு தங்களின் வலிமையாக உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |