திருமணமாகி ஒரே மாதத்தில் மற்றுமொரு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா- குவியும் வாழ்த்துக்கள்
தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று வீட்டில் விஷேசமான நாள் என்பதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
பிரியங்கா
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.
இவர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். சின்னத்திரையில் எவ்வளவு ஆக்டிவாக இருந்தாலும் பிரியங்கா, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவ்வளவு ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த மாதம் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் கோலாகலமாக நடக்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.
இன்று விஷேசம்
இந்த நிலையில், சின்னத்திரையில் இருந்து சற்று விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தப் போவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனாலும் தற்போதும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா, சின்னத்திரையில் என்ன மாற்றம் நடந்தாலும் அதனை கண்டுக் கொள்ளாமல் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்கள் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தம்பி மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்தை புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவை பார்த்த பலரும் குழந்தைக்கு தங்களின் வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW