மரிக்கொழுந்துடன் இத சேர்த்து போடுங்க.. பொடுகு பிரச்சினை அடியோடு தீர்க்கும் தைலம்- எப்படி செய்றாங்க?
இன்றை காலக்கட்டத்தில் பொடுகு பிரச்சினை நம்மிள் பலருக்கும் இருந்து வருகிறார்.
பலரும் சந்திக்கும் வழக்கமான பிரச்சினையாக இருந்தாலும் இது தலைமுடியை பாதிக்கும். நாளடைவில் பொடுகு அதிகமாகி விட்டால் தலைமுடி உதிர்வும் ஆரம்பித்து விடும்.
உச்சந்தலையில் ஏற்படும் பூஞ்சை தொற்றால் தான் காலப்போக்கில் தலை முழுவதும் பரவி, இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சில சமயங்களில், இந்தப் பிரச்சனைக்கான காரணங்கள் மற்றும் அதனை சரிசெய்யும் வழிமுறைகள் பற்றிய பதிவுகள் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால் அதன் மேல் பெரிதாக உங்களுக்கு நம்பிக்கை இருக்காது.
அந்த வகையில், பொடுகு பிரச்சினையை நிரந்தரமாக இல்லாமல் செய்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்கலாம் என்பதனை மருத்துவர் ஒருவர் விளக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பில் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பொடுகு வருவதற்கான காரணங்கள்
- பூஞ்சைத் தொற்று
- அதிக எண்ணெய் உற்பத்தி
- சோரியாசிஸ்
- உடல் உஷ்ணம்
மேற்குறிப்பிட்ட காரணங்களால் தான் பொடுகு தொற்று ஏற்படுகின்றது. இதனை போக்குவதற்கு பல கெமிக்கல் கலந்த ஷாம்பூக்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவை அனைத்தும் தற்காலிமான நிவாரணத்தையே தருகிறது.
அவற்றில் உள்ள ரசாயனங்கள் முடி உதிர்வை அதிகப்படுத்தி, காலப்போக்கில் வழுக்கை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
சித்த மருத்துவத்தின்படி, பொடுகைப் போக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன.
1. அடிக்கடி தலைக்கு குளித்தல்.
- வாரத்திற்கு மூன்று முறையாவது தலைக்கு குளிப்பது அவசியம். ஏனெனின் வெளியில் செல்லும் பொழுது ஏகப்பட்ட ரசாயனங்கள், மாசுக்கள் மற்றும் வியர்வை தலையில் இருக்கும். இது தலையில் பூஞ்சை தொற்று உண்டு பண்ணலாம். இப்படி குளிக்கும் பொழுது ரசாயனங்கள் இல்லாத, மூலிகை ஷாம்பூக்கள் அல்லது இயற்கையான ஹேர் வாஷ் பவுடர்களை பயன்படுத்தலாம்.
2. மரிக்கொழுந்து+ வல்லாரை ஹேர் பேக் பயன்பாடு
- மரிக்கொழுந்து இலைகளில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் (anti-fungal properties) உள்ளன. இதனை வல்லாரையுடன் சேர்த்து அரைத்து ஹேர் பேக்காக போடும் பொழுது பொடுகு பிரச்சினை குறைகிறது. இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போட வேண்டும். அத்துடன் தலைக்கு பேக்கை போட்டு சரியாக 1 மணி நேரம் காய விட வேண்டும்.
பொடுகு பிரச்சினை இவை அனைத்திற்கு சரியாகவில்லை என்றால் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு பாட்டி வைத்திய முறைப்படி, கூந்தல் தைலம் செய்து பயன்படுத்தலாம். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது.
கூந்தல் தைலம்
தேவையான பொருட்கள்
- சடாமாஞ்சள் (பொடித்தது)
- வெற்றிலை (அரைத்தது)
- துளசி இலைகள்
- நெல்லிக்காய்
- வெட்டிவேர்
- வெந்தயம்
- கற்றாழை
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
மேற்குறிப்பிட்ட மூலிகைகளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தைலமாக காய்ச்சி, வாரத்திற்கு மூன்று தடவைகள் தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும்.
இப்படி செய்து வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து, பொடுகு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். இந்த தைலம் கண் எரிச்சலையும் குறைத்து தலைமுடியை நன்கு வளர வைக்கும்.
சோரியாசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த தைலத்துடன் சம அளவு வெட்பாலை தைலம் கலந்து கொள்ளலாம்.
வெட்பாலை தைலம், சோரியாசிஸ் பிரச்சனைக்கு நிவாரணமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |