நான் முதலில் விளையாட இருந்த ஐபிஎல் அணி இதுதான் - மனம் திறந்த விராட் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ரன் மெஷினான விராட் கோலி 2008-ம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரையில் 201 போட்டிகளில் பங்கேற்று 6283 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2008-ம் ஆண்டு தான் பெங்களூர் அணிக்காக தேர்வாகினார். அன்றிலிருந்து இன்று வரை அந்த அணிக்காகவே விளையாடி வருகிறார், அந்நிகழ்வுகள் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒத்துப்போனதற்கு ஆர்சிபி அணி முக்கிய பங்கு வகிக்கிறது. 17 கோடி ரூபாய் வாங்கி வரும் விராட் கோலி கடந்த 2013-ம் ஆண்டு முதலிலேயே அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வந்த அவர் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை என்கிற காரணத்தினால் கடந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறினார்.
என்னதான் சிறந்த கேப்டன் பேட்ஸ்மேன் என அனைத்திலும் திகழ்ந்து வந்தாலும், இவருக்கான கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிர்ஷ்டம் மட்டும் நழுவி சென்றே கொண்டிருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விராட், முதன் முதலில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தான் ஆரம்பத்தில் என்னை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. அதன்பின்னர் இறுதியில் பெங்களூர் அணி ஏலத்தில் தேர்வு செய்து அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
இல்லையென்றால், நான் முதல் முறையாக டெல்லி அணிக்காக ஆடும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கும், அதுமட்டுமின்றி 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானையும் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.
மேலும், பெங்களூரு அணி என்னை வாங்கியது என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தருணமாக நான் பார்க்கிறேன் என விராட் கோலி மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.