இளையராஜா கொடுத்த அதிர்ச்சி.. கண்ணீருடன் மீடியாவுக்கு வந்த வனிதா- நடந்தது என்ன?
நடிகை வனிதா ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்தார் வனிதா.
வனிதாவின் புதிய திரைப்படம்
இந்த நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்திருக்கும் Mr & Mrs திரைப்படத்திற்கான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் சின்னத்திரையில் இருக்கும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். 40 வயதை தாண்டிய பெண்ணொருவர் குழந்தைபெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இளையராஜா செய்த துரோகம்
இந்நிலையில் வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் மக்கள் தனது படத்தை வந்து பார்க்க வேண்டும் என கண்ணீருடன் பேசி இருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய வனிதா, "இளையராஜாவிடம் இந்த பாடலை பயன்படுத்த தனிப்பட்ட முறையில் பேசினேன். என் மகள் உடன் சென்று அவர் காலில் விழுந்தேன். ஓகே என்று தான் சொன்னார். அதன் பின் சோனி நிறுவனத்திடம் அனுமதி வாங்கினேன்." "நான் நேரில் சென்று கேட்கும்போதே திட்டி இருக்கலாமே, இப்போ வந்து வழக்கு மட்டும் போடுறீங்களே" என கண்ணீருடன் பேசியிருக்கிறார்.
மேலும், “ சின்ன வயதில் இருந்தே நான் அவரது வீட்டில் வளர்ந்திருக்கிறேன். அவர் வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவர்..” என்றும் இளையராஜா குடும்பத்துடன் இருக்கும் பிணைப்பு பற்றியும் வனிதா கண்ணீருடன் பேசினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

