இந்தியாவில் யாழ் பிட்டுவுக்கு கிடைத்த அங்கீகாரம்- பணப்பரிசு வென்ற வாகீசன்
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருக்கும் யாழ் பிரபலம் வாகீசனுக்கு 1 லட்சம் பணப்பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
டாப்பு குக்கு டூப்பு குக்கு
பிரபல டிவி நிகழ்ச்சியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர்,நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகியோர் முக்கிய போட்டியாளராக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், கடந்த வாரம் Trational சுற்று இடம்பெற்றது. அதில் போட்டியாளர்களுக்கு பாரம்பரிய மற்றும் நெருங்கிய உணவுகளை சமைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வாகீசன் சமைத்த யாழ்ப்பாண ஸ்டைல் பிட்டு, சிக்கன் கறி, சம்பல் நடுவர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
1 லட்சம் வெற்றி பெற்ற வாகீசன்
கடந்த வாரம் வாகீசன் சமைத்த பிட்டுவுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இது இலங்கையின் யாழ்ப்பாண பாரம்பரிய உணவாகும். இது பாரம்பரிய சுற்று என்பதால் வாகீசன் இதை செய்து அந்த உணவுடன் தனக்கு இருக்கும் இணைப்பையும் கூறி இருந்தார்.
இது குறித்து பேசிய வாகீசன், “யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவாக பிட்டு உள்ளது. நான் பள்ளி செல்லும் காலங்களில் என் அம்மா பிட்டும் இறைச்சி கறியும் தான் போட்டு பிரட்டி தருவார். அம்மாவிற்கும் எனக்கும் இந்த பிட்டு உணவின் மூலம் நிறைய நினைவுகள் உள்ளது.” என்றார்.
அதிலும் முதல் முதலாக பிட்டின் மூலம் தான் என்னுடைய பாடல் பிரபலமானது எனவும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து செஃப் வெங்கடேஷ் பட் குறைகள் குறைவாகவும் நிறைகள் நிறைவாகவும் இருந்தது வாகிசனுடைய உணவில் தான் அவருடைய பாரம்பரிய உணவின் சுவையும் அருமை என வெற்றியாளராக அறிவித்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |