த்ரிஷாவின் பணத்தில் வாழாத அவரது தந்தை - எப்படி இறந்தார் தெரியுமா?
பிரபல நடிகை த்ரிஷா பற்றி யாரும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. நடிகை த்ரிஷாவின் அம்மாவை பலரும் அறிநததுண்டு ஆனால் அவருடைய தந்தை பற்றி தெரியுமா? தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் த்ரிஷா. இவர் சுமார் 22 ஆண்டு காலமாக சினிமாவில் பெரும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது இளம் நடிகைகள் எத்தனை பேர் வந்தாலும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை.
சமீபத்தில் தான் த்ரிஷா பெரிய முன்னணி ஷீரோ்ககளுடன் சூப்பர் ஹிட் படங்களை நடித்திருந்தார். த்ரிஷா என்ன தான் செய்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அவருடைய அப்பா த்ரிஷாவின் சம்பாதியத்தில் வாழவில்லை என்ற கருத்து வெளியாகி உள்ளது.

நடிகை த்ரிஷா பற்றி தற்போது பல சர்ச்சைகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கெல்லாம் த்ரிஷா காதுகொடுக்கவில்லை. அவர் அவருடைய வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
நடிகை த்ரிஷாவின் அம்மா பற்றி பலருக்கும் தெரியும். அவர் த்ரிஷாவுடன் திரைப்பட ஷீட்டிங் எல்லாம் வந்திருக்கிறார். நடிகை த்ரிஷாவிற்கு அவர் கெரியரில் இவ்வளவு தூரம் வளர்ந்து வர பக்க பலமாய் இருந்தது அவரது அம்மா உமா தான்.
த்ரிஷாவும் பல மேடைகளில் அவருடைய வெற்றிக்கு காரணம் தன்னுடைய தாய் தான் என்று கூறி இருக்கிறார். ஆனால் த்ரிஷாவின் தந்தை பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

த்ரிஷாவின் தந்தை
தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய மகள் பெரிய ஹீரோயினாக இருந்தாலும் கேமராவுக்கு முகம் காட்டாமல் தள்ளியே இருந்தவர் தான் க்ரிஷாவின் தந்தை கிருஷ்னன்.
த்ரிஷாவின் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஏதோ சில பிரச்சனை ஏற்பட்டதால் அவர் தன்னுடைய மகள் மற்றும் மனைவியுடன் தங்கியது இல்லை என தகவல் வெயியாகி உள்ளது.
ஆனால் இது உண்மையா வதந்தியா என்பது பற்றி தெரியாது. ஆனால் தன்னுடைய மகள் எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்து கோடி கோடியாக சம்பாதித்தாலும் த்ரிஷாவின் அப்பா அவருடைய சம்பாதிப்பிலே தான் இறுதிவரை வாழ்ந்துள்ளாராம்.

இவர் சென்னையில் பல நட்சத்திர ஹோட்டல்களில் மேனேஜராக பணியாற்றி இருக்கிறார். அதிலும் இவரை போல நேர்ரமையான மனிதர் யாரும் இல்லை என்ற அளவிற்கு கிருஷ்ணன் மிகவும் நேர்மையானவராம்.
அதுமட்டுமின்றி ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மிகவும் பக்குவமாக பேசுவார் என்று அவருடன் பழகிய, நேரில் பார்த்தவர்கள் கூறி இருக்கிறார்கள்.
முக்கியமாக, அவர் ஒரு பெரிய நடிகையின் தந்தை என்பதை எங்கேயும் காட்டிக்கொள்ளாமல் அவருடைய லையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பாராம்.

த்ரிஷா எத்தனை படங்கள் நடித்தும் இறுதிவரை அவரை சினிமா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்கூட நம்மால் பார்க்க முடிந்ததில்லை. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த அவர் திடீரென ஹைதராபாத்துக்கு சென்று ஹோட்டலில் பணிபுரிய ஆரம்பித்துள்ளார்.
இந்த முடிவிற்கு என்ன காரணம் என்பது தெரியாது. இதன்போது கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு திடீரென மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார்.
தந்தையின் இறப்பு த்ரிஷாவை மிகவும் பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை த்ரிஷா தந்தையை நினைத்து தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறாராம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |