அதிகரித்து வரும் வெப்ப அலை தாக்கம்! தெரிஞ்சுக்க வேண்டிய முக்கிய ஆரோக்கிய குறிப்புகள்
கோடை வெயில் இப்போதே நம்மை வாட்டத் தொடங்கிவிட்டது, வெயில் அதிகம் இருப்பதால் நம் உடல் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு நோய் தொற்றுக்களும், ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கோடை காலத்தில் உணவு முறை தொடக்கம் ஆடை வரை அவசியம் பின்ப்பற்ற வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவான கோடைகால டிப்ஸ்
கோடையில் உடல் வெப்பம் அதிகரிக்கும் போது வியர்வை அதிகமாக வெளியேறி நீர்ச்சத்து குறையும். இதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, கோடை காலத்தில் அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காரம், புளிப்பு அதிகமான உணவுகள் மற்றும் செரிக்க கடினமான உணவுகளை குறைத்தால் நல்லது. அசைவ உணவு, எண்ணெய் பொரியல், புளிக் குழம்பு போன்றவை வெப்பத்தை அதிகரிக்கக்கூடியவை என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.
இதற்குப் பதிலாக பீர்க்கம், சுரை, பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, முள்ளங்கி போன்ற நீர்க்காய்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

காலை நேரத்தில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளிப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வெளியில் செல்லும் போது தண்ணீர் எடுத்து செல்ல மறக்கக் கூடாது.
குறிப்பாக கோடை காலங்களில் காபி, டீ அதிகம் குடிப்பதை குறைத்து இளநீர், மோர் போன்ற இயற்கை பானங்களை அதிகம் பயன்படுத்துவது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக்கொள்ள துணைப்புரியும். வாரத்தில் இரு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதும் உடல் வெப்பத்தை குறைக்க உதவும்.
வெயில் காலத்துக்கு சிறந்த பானங்கள்

மண்பானை தண்ணீர் – உடல் சோர்வை குறைத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்
இளநீர் – உடனடி ஆற்றலை வழங்கும்
லெமன் ஜூஸ் (உப்பு + சர்க்கரையுடன்) – நீரிழப்பை தடுக்கும், மயக்கத்தை குறைக்கும்
புதினா நீர் – உடல் சூட்டை குறைத்து வாந்தி, மயக்கம் போன்றவற்றை தடுக்க உதவும்
தர்பூசணி, வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் தினமும் சேர்க்கலாம்
சீரக தண்ணீர் அல்லது வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் – உடல் சூட்டை கட்டுப்படுத்த உதவும்
உடை மற்றும் வெளிப்புற பாதுகாப்பு

வெயிலுக்கு சிறந்தது பருத்தி உடைகள்தான். பொதுவாகவே பருத்தி உடைகள் வியர்வையை உறிஞ்சி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரியும். கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து, வெளிர் நிற ஆடைகளை தேர்வு செய்வது நல்லது.
வெளியில் செல்லும் போது சன் கண்ணாடி பயன்படுத்தலாம். சன் ஸ்கிரீன் க்ரீம் தடவுவது சருமத்தை பாதுகாக்கும். வெளியில் சென்று வந்ததும் முகம் மற்றும் உடலை கழுவுவது அவசியம்.
சரும பராமரிப்பு குறிப்புகள்

வெயிலால் சருமம் வறண்டு போகலாம் அல்லது பருக்கள் அதிகரிக்கலாம். இதைத் தவிர்க்க: வாரத்திற்கு 2 முறை பேஸ் பேக் பயன்படுத்தலாம் பப்பாளி சாறு பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு உதவும் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைத்து ஓய்வெடுத்தால் கண் எரிச்சல் குறையும்
தர்பூசணியுடன் பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவலாம். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். எல்லாவற்றையும் விட முகத்தை அடிக்கடி சுத்தமான நீரில் கழுவுவது மிகவும் முக்கியம். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கோடையிலும் சரும ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |