இந்த 3 ராசிக்கு அடித்தது ராஜயோகம்.. சுக்கிரன் குரு எந்த மாதிரியான அதிர்ஷ்டத்தை கொடுப்பார்
ஜோதிடத்தின் படி சுக்ரன் மற்றும் வியாழன் மிகவும் முக்கியமான கிரகங்களாக பார்க்கப்படுகிறது. சுக்கிரன் செல்வத்தை அளிப்பார். வியாழன் அதிர்ஷ்டத்தை கொடுப்பார்.
இந்த இரண்டு கிரகங்களும் எந்த ராசிக்கு பலனை கொடுப்பார் என்பதை பற்றி பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சுக்கிரன், குரு இணைவதால் வருமானம் அதிகரிக்கும். அடுத்து வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும்.
கடன் தொல்லைகள் நீங்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ஆடம்பர வாழ்க்கையை அனுபவியுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மனைவி மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சியடைவீர்கள். சொந்த பந்தங்களால் சந்தோஷமும் அதிகரிக்கும்.
கொரிய பெண்கள் உதட்டை சிவப்பாக வைத்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா? நீங்களே தயாரிக்கலாம்..!
மிதுனம்
மிதுன ராசிக்கு சுக்கிரன் வியாழன் சேர்க்கையானது தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய வேலை கிடைக்கும்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். அதிக லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்த பணியை தொடங்குவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். பல லாபங்களை தேடித்தரும்.
கடகம்
கடக ராசிக்கு சுக்கிரன் வியாழன் சேர்க்கையால் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மேலும், வெளிநாட்டில் இருந்து பண வரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும்.
தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.