சர்க்கரை பொட்டலத்தை வைத்து என்ன செய்கிறார்? 5 மில்லியன் பேர் அவதானித்தும் புரியாத புதிர்
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும், இது விரைவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது இணையவாசிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
சாதாரண சர்க்கரை பொட்டலம் ஒன்றை வைத்து ஒரு மனிதர் செய்யும் மாயாஜாலம் அப்பகுதி மக்களையும், இந்த வீடியோவை இணையத்தில் கொண்டவர்களையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோ ஓவர்டைம் என்கிற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு, இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
ஆனால் முதன்முதலில் இந்த இந்த வீடியோ ஜேடன் ரே என்பவரால் டிக்டாக்கில் பதிவிடப்பட்டது, இதன்பின்னர் தான் இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வைரல் வீடியோவில், ஒரு மனிதர் சர்க்கரைப் பொட்டலத்தை பிய்த்து அதிலுள்ள சர்க்கரை முழுவதையும் அவரது இடது கையில் கொட்டுகிறார்.
பின்னர் அவர் கையில் வைத்திருக்கும் சர்க்கரையை தூக்கி காற்றில் எறிந்துவிட்டு, அந்த பேப்பரை வாயில்,வைத்துக்கொள்கிறார். பின்னர் தனது வாயிலிருந்து அந்த பேப்பரை எடுத்தவர், வானத்திலிருந்து எதையோ பிடிப்பது போல் வானத்தை நோக்கி வலது கையைக் காட்டுகிறார்.
திடீரென்று அவர் காற்றில் வீசிய சர்க்கரை மீண்டும் அவர் கைகளில் வருகிறது, அவர் அந்த சர்க்கரையை மீண்டும் அந்த பொட்டலத்திற்குள் கொட்டுவதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது.
'நான் இதை 57 முறை பார்த்தேன், ஆனால் இன்னமும் இவ்வாறு நடந்தது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ நெட்டிசன்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது,
ஆனால் சிலர் அவர் போலியான கட்டை விரலை பயன்படுத்தி இந்த கண்கட்டி வித்தையை செய்கிறார் என்று கூறுகின்றனர். மற்றொருவர் 'நான் இந்த வீடியோவை பலதடவை பார்த்தேன், பாஸ் செய்தும் பார்த்தேன், ஆனால் அவர் இதை எப்படி செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை' என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இதுபோன்று பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
I’ve watched this 57 times and still can’t figure it out ?? (via jadon.ray/TT) pic.twitter.com/TjsFrm7Udg
— Overtime (@overtime) February 25, 2022