நொடியில் ருசிக்க பசலைக்கீரை ஆம்லெட்... சுடச் சுட 5 நிமிடத்தில் தயாரிக்கலாம்!
சுடச் சுட பசலைக்கீரை ஆம்லெட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நொடியில் பசியாற்றும் ஆரோக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்று.
தேவையான பொருட்கள்
- முட்டை - 2
- பசலைக்கீரை - 1 கப்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- உலர்ந்த கற்பூரவள்ளி இலை - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
- வெண்ணெய் - 1 டீஸ்பூன்
- பால் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு

செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் பசலைக்கீரையை போட்டு, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
பின்னர் அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, கையால் அதனை லேசாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, பால், உப்பு, மிளகு மற்றும் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் பசலைக்கீரை மற்றும் கொத்தமல்லியைப் போட்டு, மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஆம்லெட்டுகளாக ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான பசலைக்கீரை ஆம்லெட் ரெடி!!!