Siragadikka Aasai: ரோகினி, மனோஜை நிரந்தரமாக பிரிக்க சதி! விஜயா போடும் திட்டம் என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் மற்றும் ரோகினியை நிரந்தரமாக பிரிப்பதற்கு விஜயா திட்டமிட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் கூறிய பொய்களில் ஒன்றான மலேசியா மாமா அம்பலமாகியுள்ளது. இதனால் விஜயா ரோகினி மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றார்.
இதனால் அவரை கொடுமைப்படுத்துவதுடன், மனோஜிடம் நெருங்கவிடாமலும் இருக்கின்றார். மீனா விடயத்தில் விஜயா சிந்தாமணியுடன் சேர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றார்.
என்னதான் மாமியார் வில்லியுடன் சேர்ந்து குடைச்சல் கொடுத்து வந்தாலும் அதனை தனது கணவர் முத்து மூலமாக சுலபமாக மீண்டு வந்துவிடுகின்றார் மீனா.
தற்போது மாமியார் விஜயா மீனாவை விட்டுவிட்டு ரோகினி பக்கம் திரும்பியுள்ளார். ஆம் சாமியார் மூலமாக ரோகினி முத்து இருவரையும் நிரந்தரமாக பிரிப்பதற்கு தனது தோழியிடம் உதவி கேட்கின்றார்.
இதை அனைத்தையும் வெளியே நின்று ரோகினி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்து என்ன பிளான் ரோகினி போடுவார்? இதிலிருந்து எப்படி தப்பிப்பார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |