Siragadikka Aasai: மனோஜின் திருட்டு வேலையை கண்டுபிடித்த முத்து! கதைகளத்தில் திடீர் மாற்றம்
சிறகடிக்க ஆசை சீரியலில் நகையைக் குறித்து பாட்டி பிறந்தநாள் முடியும்வரை எந்தவொரு கேள்வியும் கேட்கக்கூடாது என்று மீனா முத்துவிடம் சத்தியம் வாங்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து மற்றும் மீனா இவர்களின் வாழ்க்கையை கதைகளமாக எடுத்துள்ளனர். இரண்டு மகன்கள் மீது பாசம் வைத்திருக்கும் தாய் முத்துவை மட்டும் வெறுத்து ஒதுக்குகின்றார்.
ஆனால் இதற்கான காரணத்தினை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாக வைத்துள்ளதுடன், மீனாவை அவரது மாமியார் கொடுமையும் படுத்தி வருகின்றார்.
மனோஜின் மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து மனேஜை திருமணம் செய்துள்ள உண்மை விஜயாவிற்கு தெரியாமல் இருக்கின்றது.
வீட்டில் அனைவரும் சுயநலமாக இருக்கும் நிலையில், மீனா முத்து மட்டுமே குடும்பத்திற்காக அனைவரையும் அனுசரித்து செல்கின்றனர்.
மனோஜ் மீண்டும் முட்டாள்தனத்தினால் பணத்தை கோட்டைவிட்டு வந்ததால், மீனாவிற்கு பாட்டி கொடுத்த நகையை அடமானம் வைத்து சமாளிக்க விஜயா நகையை, மனோஜிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் மனோஜ் குறித்த நகையை விற்றால் தான் அதிக பணம் கிடைக்கும் என்பதால் அதனை விற்றுவிட்டார். தற்போது பாட்டியின் பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த முத்து, மீனா ஏமாந்து போயுள்ளனர்.
விஜயா தற்போது கவரிங் நகையை வாங்கிக் கொடுத்து அவர்களை அனுப்பியுள்ளார். முத்துவிற்கு மனோஜ் மீது சந்தேகம் எழுந்த நிலையில், பயங்கர கோபத்துடன் கிளம்புகின்றார்.
ஆனால் மீனா பாட்டி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முத்துவை சமாதானம் செய்து அவரிடம் சத்தியம் வாங்கியுள்ளார். இதனால் மனோஜ் மீதான கோபத்தினை முத்து வெளியே காட்டிக் கொள்ளாமல் அடக்கி வைத்துள்ளார்.
இந்த கோபம் எப்பொழுது பூதாகரமாக மாறும் என்றும் இதனால் வீட்டில் என்ன பிரச்சனை எழும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? ஆரோக்கியத்திற்கு சத்குரு சொல்லும் ஆலோசனை](https://cdn.ibcstack.com/article/8e055548-f292-4446-bc70-e1fc744d13e3/24-668376972fee8-md.webp)