singapenne: அன்புவை கடத்தி நாடகம் போடும் மகேஷ்.. பதறிப்போன ஆனந்தி
ஆனந்தி கர்ப்பத்திற்கு அன்பு தான் என நினைத்த மகேஷ் கடத்தி வைத்து கொடுமை செய்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார் என தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போகிறார்.
ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் அவரின் அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. அதன் பின்னர், ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
அன்புக்கும் துளசிக்கும் திருமணம் பேசி முடிவாகி அதன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் மனம் உடைந்து போன ஆனந்தி அவரின் வாழ்க்கையில் அடுத்த என்ன நடக்கும் என தெரியாமல் தவிப்பில் இருக்கிறார்.
இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்கையில் யாருக்கு ஆனந்தி கர்ப்பம் தெரியக் கூடாது என பயந்தார்களோ, அதே போன்று ஆனந்தி கர்ப்பம் மகேஷிற்கு தெரியவந்து விட்டது.
அன்புவை கடத்திய மகேஷ்
இந்த நிலையில், கடும் கோபமடைந்த மகேஷ் அன்புவை அடித்து மிரட்டியதுடன், ஆனந்தியுடன் மகேஷை பார்க்க வரும் பொழுது அன்புவை ஆட்கள் வைத்து கடத்துகிறார், கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறார்.
இது தெரியாத ஆனந்தி மகேஷுன் வீட்டிற்கு பதற்றத்துடன் வருகிறார்.
அதன் பின்னர் அன்புவின் அம்மா மற்றும் அவரின் தங்கை இருவரும் பொலிஸ் நிலையத்தில் அன்புவை காணவில்லை என புகார் கொடுக்கிறார்கள்.
ஆனந்தியிடம் அன்புவை கண்டுபிடிப்பதாக கூறிய மகேஷ், ஒரு அறையின் கதவை திறக்கிறார். அந்த காட்சிகளில் பார்க்கும் பொழுது ஆனந்தியை ஏமாற்றியமதற்காக அன்புவை கடத்தி வைத்து மகேஷ் தொல்லை கொடுக்கிறார்.
மகேஷ் செய்த தவறிற்கு தண்டனை அனுபவிக்கும் அன்பு, ஆனந்தியை திருமணம் செய்து கொள்வாரா? என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |