சனி அஷ்டம் 2026: பாரிய பொருளாதார வீழ்ச்சி இந்த ராசிகளுக்கு உறுதி! எச்சரிக்கும் ஜோதிடர்கள்
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார்.

அவர் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார்.
அந்தவகையில், 2026 மார்ச் 13 ஆம் திகதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார்.அதன் பின் ஏப்ரல் 22 ஆம் திகதி உதயமாவார். இப்படி சனி பகவான் அஸ்தமிக்கும் போது பலவீனமாக இருப்பார்.

அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்ததாலும், குறிப்பிட்ட சில ராசிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகின்றார்கள் என ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி சனியால் சிக்கலில் மாட்டப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாவதால், அந்த ராசியில் பிறந்தவர்கள் பண விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நிதி விடயத்தில் இவர்களை ஏமாற்றக்கூடும்.
வியாபாரத்தில் ஈடுப்படுபவர்கள் பாரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். அதனால் அவசரமாக எந்த முடிவுகளை எடுத்தாலும் நிதி நிலையில் பிரச்சினையை சந்திக்க கூடும்.
அந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதிலும்,மற்றவர்களிடம் இருந்து கடன் பெறுவதிலும் அவதானமாக இருக்க வேண்டும். வீண்செலவுகள் செய்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாவதால் துலா ராசியினர் பெரியளவில் பண இழப்பை சந்திக்க வேண்டி ஏற்படலாம்.
அதனால் பணத்தை கையாலும் போதும், எடுத்துச்சொல்லும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக ராசியில் சனி தாக்கம் செலுத்துவதால், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராத அளவுக்கு சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். பணியிடத்தில் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் சில நேரங்களில் தொழிலையும் இழக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனிஅஸ்தமனமாகவுள்ளதால், இவர்களின் வாழ்வில் மார்ச் இறுதியில் கடுமையான பணப்பிரச்சினை ஏற்படும்.
பெரிய செலவுகளை செய்யும் முன்னரி் பல தடவை சிந்தித்து நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.கையில் இருக்கும் சொத்து அல்லது பணம் திருட்டுப்போகும் வாய்ப்பு காணப்படுகின்றது.
சொத்து பத்திரங்களை கையாளும் போது அவதானமாக இருக்க வேண்டும். பெரிய முதலீட்டு ஆவணங்களில் கையெழுத்து போடும் முன்னர் நன்றாக ஆராய்ந்து பின்னர் முடிவெடுப்பது நல்லது. முடிந்தவரை செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்ச்சிக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |