உலகை உலுக்கும் எப்ஸ்டீன் பைல்ஸ் vs டெவில்ஸ் பைபிள்: சாத்தான் தன் கைப்பட எழுதிய புத்தகம்!
அண்மை காலமாக இணையத்தில் வைரலாகிவரும் குறிப்பிட்ட சில உலக செய்திகள் சாதாரண மக்களை பெரியளவில் பாதித்துள்ளதுடன், பெருமளவானோருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.
குறிப்பாக எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரம் உலகத்தையே உலுக்கி வருகின்றது. இதுவரையில் நாம் வியந்து பார்த்த உலக தலைவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு மோசமானவர்களா? என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஜெஃப்ரி பைல்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 30 லட்சத்து்கும் அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இது தான் தற்போது உலக தலைவர்களையே நிலைகுலைய செய்துள்ளது.

இவ்வாறு மனிதர்களால் சகித்துக்கொள்ளவே முடியாத விடயங்களை உலகின் முக்கிய புள்ளிகளாக திகழும் நபர்கள் எவ்வாறு செய்தார்கள் என்று சிந்திக்கும் போது தான், சாத்தான் பற்றிய கருத்துக்கள் உண்மையோ என்று யோசிக்க தோன்றுகின்றது.
அந்த வகையில், சிறுவர்களை பலிகொடுப்பது, சமைத்து சாப்பிடுவது, துன்புறுத்துவது, தவறான முறையில் தங்களின் இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது போன்ற எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரத்துடன் தொடர்புடைய தீய செயல்களுக்கான களஞ்சியமாக அறியப்படும் சாத்தான் பைபிள் பற்றிய ஆச்சியமான பல விடயங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சாத்தான் பைபிள் என்றால் என்ன?
உலகில் இறைத்தன்மை மற்றும் அதற்கு எதிரான தீய சக்திகள் என்ற இரு வேறு இயக்கங்கள் உண்டு என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் இதனை பறைசாற்றும் வகையில் தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் அமைகின்றது.
இன்பம் துன்பம், இருள் ஒளி, நேர்மறை எதிர்மறை இது அனைத்துமே கலந்தது தான் உலகம் என்பதை நாம் அறிவோம். அப்படி இறைவனால் மனிதர்களுக்கு வழிகாட்டியாக கொடுக்கப்பட்ட பைபிள், பகவத் கீதை, அல்குர்ஆன் போன்ற சமய நூல்கள் இருப்பது போல் சாத்தானுக்கும் ஒரு பைபில் இருப்பது உங்களுக்கு தெரியுமா?

தற்போது டெக்னாலஜி பெருகி வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்பதுதான் உண்மை. இது உண்மையா அல்லது பொய்யா என்பதை ஆராய்வதை விட இதில் உள்ள சுவாரசியங்களை நாம் அறிந்துக்கொள்வதில் தவறில்லையே.
சாத்தானிள் பைபிள் என்று அறியப்படும் கோடெக்ஸ் கிகாஸ்(Codex Gigas),13 ஆம் நூற்றாண்டில் செக் குடியரசில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய, பாதுகாக்கப்பட்ட இடைக்கால கையெழுத்துப் பிரதியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனை சாத்தானே தன் கைப்பட எழுதியதாக குறிப்பிடப்படுகின்றது.

இது சுமார் 92 செ.மீ (36 அங்குலம்) நீளமும், 50 செ.மீ அகலமும், 22 செ.மீ தடிமனும் கொண்டது. இதன் எடை சுமார் 75 கிலோகிராம் (165 பவுண்டுகள்).என குறிப்பிடப்படுகின்றது. அந்த புத்தகத்தை தூக்குவதற“பு குறைந்த பட்சம் இரண்டுபேராவது தேவையாம்.
ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு நெடுவரிசைகளில் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை உருவாக்க சுமார் 160 கிலோ எடையுள்ள கன்று தோல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதில் மந்திரங்கள் மற்றும் சாத்தானின் முழுப் பக்க உருவம் இடம் பெற்றுள்ளதால், இது மர்மமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நூலை ஒரு துறவி தனது மரணதண்டனையைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் ஒரே இரவில் எல்லா அறிவும் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதுவதாக உறுதியளித்து, சாத்தானின் உதவியுடன் இதை எழுதியதாக நம்பப்படுகின்றது.
தற்போது இந்தப் புத்தகம் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள சுவீடன் தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் உலகளவில் அரங்கேறிவரும் சகித்துக்கொள்ளவே முடியாத கொடிய சம்பங்கள் சாத்தான் பற்றிய நம்பிக்கை அற்றவர்களும், ஒரு வேலை சாத்தான் இந்த உலகில் இருப்பது உண்மையோ என சிந்திக்க தோன்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |