ஆத்தாடி... இது வயிறா? இல்லை இரும்பு கடையா? - நோயாளியைக்கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்!
குழந்தைகள் தான் பொதுவாக வீட்டில் உள்ள சின்ன சின்ன பொருட்களை விழுங்கிவிடுவார்கள். அப்படி சில பொருட்களை விழுங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து உடனடியாக அப்புறப்படுத்துவார்கள். '
ஆனால், இங்கு நாம் பார்க்கப்போவது, 35 வயதுடைய நபர் குழந்தை போல செய்த செயலைப் பற்றிதான். துருக்கியின் Ipekyolu என்ற பகுதியைச் சேர்ந்த 35 அந்த நபர் திடீரென தனக்கு வயிற்று வலி எனக் கூறி சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது, எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே ஆகியவற்றை எடுத்த மருத்துவர்கள் அதன் முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏனென்றால், அந்த நபரின் வயிற்றில் பேட்டரிகள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், ஸ்க்ரூஸ், கற்கள் என கிட்டத்தட்ட 233 பொருட்கள் இருந்திருக்கின்றன.
இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த அனைத்து பொருட்களையும் மருத்துவர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.
இதுகுறித்து, பேசியுள்ள மருத்துவர், “அறுவை சிகிச்சையின் போது ஒன்றிரண்டு நகங்கள் வயிற்றுச் சுவரில் துளைத்திருப்பதை கண்டோம். பெருங்குடலில் இரண்டு உலோகத் துண்டுகள் மற்றும் பல்வேறு அளவுகளில் இரண்டு கற்கள் இருப்பதையும் கவனித்தோம்.
அதன் பின்னர், அவரது வயிற்றை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டோம். இது மாதிரியான சம்பவங்கள் பெரும்பாலும் குழந்தைகள், சிறார்களிடையே தான் நடக்கும்.
மேலும், பெரியவர்களிடத்தில் நடந்தால் அந்த நபர் மனதளவில் பாதிக்கப்பட்டவராவோ அல்லது கைதிகள், குற்றவாளிகள் தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள்.
ஆனால், தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளவர் தனது வயிற்றை ஏதோ டூல் பாக்ஸ் போல நினைத்திருக்கிறார் போல, ஏன் அவர் இந்த பொருட்களையெல்லாம் விழுங்கினார் என்பது இன்னும் தெரியவில்லை.” எனக் கூறியிருக்கிறார்கள்.