சரிகமப-வில் ஆரம்பமாகியது இறுதி கட்டத்திற்கான முதல் தெரிவு சுற்று
சரிகமபவில் இந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்திற்கான முதல் தேர்வுச்சுற்று அத்தியாயம் ஆரம்பித்துள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போது மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி தான். இதில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
கடந்த வாரம் போட்டியில் இருந்து இரண்டு போட்டியாளர்களான ஷ்ரஜான்வீ kற்றும் அக்ஷதா வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் இறுதிக்கட்டதிற்கான முதல் தெரிவு சுற்று (Ticket to Finale) ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சிறப்பாக பாடக்கூடியவர்கள். எனவே இதில் இந்த இறுதி சுற்றுக்கு ஐந்து நபர்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். இது தொடர்பான முதல் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |