அம்மாவிற்கு சஞ்சீவ் கொடுத்த சப்ரைஸ்.. அப்போ ஆல்யாவிற்கு தெரியதா? குறும்படத்தில் சிக்கிய சம்பவம்!
அம்மாவின் புகைப்படத்தை வரைந்து சப்ரைஸ் கொடுத்த கயல் சீரியல் சஞ்சயின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ ராஜா ராணி ” சீரியலில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.
சின்னத்திரைக்கு வரும் முன்னர் சஞ்சீவ் “குளிர் 100 டிகிரி ” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளாராம்.
இதனை தொடர்ந்து சீரியலில் ஜோடியாக நடிக்கும் பொழுது தன்னுடன் இணைந்து நடித்த ஆல்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் இருவரும் இன்றும் சீரியலில் நடித்து வருகிறார்கள்.
வைரலாகும் ஓவியம்
இந்த நிலையில் சீரியலில் சஞ்சீவ் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியாகிய வீடியோக்காட்சியொன்றில் சஞ்சீவ் அவரின் அம்மாவின் புகைப்படத்தை வரைந்து அம்மா வரும் போது காட்டி சப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஓவியத்தை பார்த்து அம்மா அசந்து போனதுடன் மகனின் அன்பை பாராட்டியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் சஞ்சீவின் ஓவிய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
