ஏழரை சனியும், அஷ்டமத்து சனியும் குறி வைத்து வாட்டி வதைக்குதா? புரட்டாசி சனியில் இதை மட்டும் செய்தால் தப்பிச்சிடலாம்!
சனி இருக்கும் இடத்தை விட சனியின் பார்வை படும் இடம் பாழ் என்று சொல்வார்கள்.
அதே நேரத்தில் நல்ல மனம் படைத்தவர்கள், உதவி செய்யும் குணம் கொண்டவர்களை சனிபகவான் தண்டிக்க மாட்டார்.
வரும் சனிப்பெயர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுபவர்கள் தப்பிக்க என்ன வழி என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சனிப்பெயர்ச்சி எப்போது ?
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 2023 சனிப்பெயர்ச்சி நடக்க உள்ளது.
இந்த பெயர்ச்சியின் போது சனிபகவான் மகர ராசியில் இருந்து , கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இதன் காரணமாக கடக ராசிக்கு அஷ்டம சனியும், கும்ப ராசிக்கு ஜென்ம சனியும், மீன ராசிக்கு ஏழரை சனியின் முதல் அத்தியாயம் ஆரம்பிக்கும்.
ஆபத்தில் இருந்து தப்பிக்க புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் விரதம்
- சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனி பகவானுக்கு பிடித்தமானது.
- சனிபகவான் அளிக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்க அனுமனையும், பெருமாளையும் சரணடையுங்கள்.
- புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை விளக்கேற்றி வணங்கினால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.