உலகின் மிகப்பெரிய பணக்கார கைதி - வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு
சாங்பெங் ஜாவோ, ஏப்ரல் 2024 இல் நான்கு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய பணக்கார கைதியாக உருவெடுத்தார்.
உலகின் மிகப்பெரிய பணக்கார கைதி
கிரிப்டோ நிறுவனமான பைனான்ஸின் நிறுவனர் சாங்பெங் ஜாவோ 2024 இல் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் பைனான்ஸில் சட்டவிரோத செயல்களாகும்.
கைது செய்யபட்ட ஜாவோ Cryptocurrency பரிமாற்றமான பைனான்ஸ் நிறுவனத்தின் நிறுவர். இவர் இதில் செய்த பரிவர்த்தனை சட்டவிரோத செயல்களுக்கு நான்கு மாத சிறைத்தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
இவரின் சட்டவிரோத செயல் சைபர் குழுக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது அமெரிக்காவின் பணமோசடி எதிர்ப்பு தடைச்சட்டத்திடம் தான் செய்த குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளார்.
இதற்காக தான் நான்கு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. Bloomberg நிறுவனத்தின் கூற்றுப்படி இவர் கைது செய்யபட்டாலும் அவரது செல்வம் அதாவது அவரது நிதி உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.என தெரிவித்தது.
இவர் கைதியாக சிறை உள்ளே செல்லும் போது அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு $43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
பின்னர் 2025 ஆண்டு நிலவரப்படி பார்த்த போது இவரின் சொத்து மதிப்பு 74.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ. 6,20,01,00,00,00,000 அல்லது ரூ. 6.2 லட்சம் கோடி) உயர்ந்தது.
இதற்கு பின்னர் தான் இவர் உலகின் மிகப்பெரிய பணக்கார கைதியாக பிரபலமானார். ஜாவோ 2023 ம் ஆண்டில் நிர்வாக அதிகாரி (CEO) பதவியில் இருந்து விலகியிருந்தாலும், பைனான்ஸில் உள்ள 90% உரிமையை தக்க வைத்திருந்தார்.
நிறுவனத்தில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இவரின் நெருங்கிய நண்பர் என்பதால் அவரிடம் வலுவான செல்வாக்கு காணப்பட்டது. பின்னர் 2017 பைனான்ஸ் கிரிப்டோ வர்த்தக துறையில் மிக விரைவாக முன்னிலை பெற்று வந்தது.
இதனிடையே ஏற்பட்ட சந்தை வீழிச்சியால் வணிகத்தில் சட்டபூர்வதன்மை குறித்து இதற்கென இருக்கும் ஒழுங்குமுறை அதிகாரிகள் இதை விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதனால் நிறுவனம் பெரும் சவால்களை எதிர்கொண்டது. இதன் பின்னர் ஜாவோ 4 மாத சிறை தண்டனையில் இருந்தார். இவர் கைதியாக இருக்கும் வரைக்கும் இவரிடம் $43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இவர் சிறையில் இருக்கும் போதே அவரின் சொத்து மதிப்பு $74.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (ரூ. 6,20,01,00,00,00,000 அல்லது ரூ. 6.2 லட்சம் கோடி) உயர்ந்தது. இதன் காரணமாக தான் இவர் உலகின் மிகப்பெரிய பணக்காரராக பிரபலமானார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |