"கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" - மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தடியடி மற்றும் தாக்குதல் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனங்களையும் கருத்துகளையும் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே பல பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனும் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் ஆவேசம்
தனது சமூக வலைதளப் பதிவில், "கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" என்று ஆவேசமாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதை மறைமுகமாகக் கண்டித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரது கருத்துக்கு ஆதரவாகவ இணையவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருவதால், அந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது.
Don’t answer questions with lathis.#Neet
— Pradeep Ranganathan (@pradeeponelife) July 22, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |