மார்ச் மாத ராசிபலன்கள்! கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜாதகத்தின் பல யோகங்கள் மூலமும் தோஷங்கள் மூலமும் பொதுவாக மனிதர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள முடியும்.
கிரகங்களின் விசித்திரமான கலவையும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பலரது உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்துள்ளன.
இந்த நிலையில், இந்த மாதம் ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், யார் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் அதிகரித்து வரும் உடல் எடையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கடுமையான நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருங்கள். உடல் நலனுக்கான யோகா மற்றும் தியானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்:
சமச்சீரான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிக எண்ணெய் உள்ள பதார்த்தங்களால் பிரச்சனைகளை ஏற்படும். கொழுப்பு மிகுந்த உணவுகளால் உடல் ஆரோக்கியத்துக்கு பிரச்சனை ஏற்படலாம்.
இதயம் ஆரோக்கியமாக இருக்க, இந்த மாதம் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. நேரத்துக்கு சாப்பிடுவது, நேரத்துக்கு தூங்குவது நல்லது. அதிக மன அழுத்தம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
மிதுனம்:
முழங்கால் சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். மூட்டுவலி பிரச்சனை இருந்தால் அது தொடர்பான மருந்துகளை சாப்பிட்டு உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். சிறிய பிரச்சனை என்று அதிஅயும் புறக்கணிக்காதீர்கள்.
அதிக சர்க்கரையை உணவில் சேர்ப்பதால் பிரச்சனை வரக்கூடும். அதிகம் கோபப்படக்கூடாது. இல்லையெனில் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். காது வலியால் பிரச்சனை ஏற்படக்கூடும். நீண்ட நேரம் இயர் போன்களை பயன்படுத்துவது நல்லது.
கடகம்:
சிறுநீர் தொற்று போன்ற உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால், அதிக தண்ணீர் குடிப்பதுடன், உடல் தூய்மையையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
உணவில் சத்துக்களின் குறைபாட்டால், நோய்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. தலைவலி பிரச்சனை உண்டாக வாய்ப்புண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். சமையலறையில் வேலை செய்யும் போதும், கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் உடல்தகுதியில் சுறுசுறுப்பாக இருப்பது உத்தமம். தொடர்ந்து யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். முடிந்தால் காலையில் சிறிது நேரம் நடக்கவும். நரம்புகளில் ஏற்படும் விகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
இந்த காலகட்டத்தில் சர்க்கரை நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாமை மற்றும் கட்டுப்பாடற்ற உணவு தைராய்டு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கன்னி:
வாகனம் ஓட்டும்போது அவசரம் வேண்டாம், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரத்தக் கோளாறுகள் அல்லது மனநலக் கோளாறுகள் பிரச்சனைகளை உருவாக்கலாம். ஆகையால், மனதில் அதிக சுமையை எடுத்துக் கொள்ளாதீர்கள். பற்களுக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ராசியினர் இரவில் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. தலைவலியால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும். உடல் சோர்வு, சோம்பல் மற்றும் கவலையை அனுபவிப்பீர்கள்.
துலாம்:
சர்க்கரை நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மனம் அலைபாய வாய்ப்புள்ளது. போதைப்பொருட்கள் போன்றவற்றில் நாட்டம் செல்லலாம். இந்த காலத்தில் கடுப்பாட்டுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அகையால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைக் கவலைகளால் உடல் நலம் கெடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
விருச்சிகம்:
மார்ச் மாதத்தில் தொற்று நோயிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் வைரஸ் மற்றும் தொற்று நோய்களின் பிடியில் இந்த நேரத்தில் எளிதில் சிக்கிவிட முடியும்.
பெற்றோர்கள் சிறு குழந்தைகளை நொறுக்குத் தீனிகள், வெளி உணவுகள், வறுத்த உணவுகள் போன்றவற்றிலிருந்து விலக்கி வைக்க வேண்டும். உடற்பயிற்சிகளை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். கண்கள் தொடர்பான கோளாறுகளில் எச்சரிக்கையாக இருங்கள்.
தனுசு:
ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இந்த மாதத்திலிருந்து தியானம் யோகா ஆகியவற்றை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டும். அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
பெரும்பாலும் இரவு நேரங்களில் கனமான உணவைத் தவிர்ப்பது நல்லது. லேசான உணவை இரவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
மகரம்:
ஒற்றைத் தலைவலி உள்ள நோயாளிகள் வழக்கமான மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். முடி தொடர்பான பிரச்சனைகளும் இந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படலாம். நோய்களிலிருந்து விலகி இருக்க சூரியநாராயணரை வழிபட வேண்டும்.
கும்பம்:
தவறான உணவு உண்பது உங்கள் உடல் செயல்முறையைத் தொந்தரவு செய்யும். எனவே, உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணர்கள் தூய்மையை கவனித்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மற்றும் ஊட்டச்சத்தை அளிக்கும் உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். தற்போது, உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
எனவே உங்கள் தினசரி வழக்கத்தில் யோகா அல்லது உடற்பயிற்சியை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலம் பெற சூரியநாராயணன் மற்றும் குருக்களை வணங்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் உடற்பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் எடை அதிகமாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்பெண்டிக்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
தோல் தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். வானிலை மாற்றத்தால் பிரச்சனை ஏற்படலாம். நோயைத் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் இம்முறை அதிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.