விஜய் பட பாணியில் மாதம்பட்டியை எச்சரித்த ஜாய் கிரசில்டா! தீயாய் பரவும் பதிவு
கர்மா நிச்சயம் பதில் சொல்லும் என்ற விடயத்தை விஜய் பட டயலாக்கை குறிப்பிட்டு, மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரசில்டா தற்போது இன்ஸ்டாவில் போட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
ஆனால் இவரின் எல்லா புகழுக்கும் ஆப்பு வைக்கும் வகையில், மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருகின்றார்.
ஆனால் இது குறித்து இன்றுவரையில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து ஒரு பதிலும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜயின் மெரஸல் திரைப்படத்தின் பிரபல டயலாக்கை குறிப்பிட்டு, ஜாய் கிரசில்டா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
