இந்த நிலைமைக்கு நயன்தாராதான் காரணம்... - பட்டென போட்டுடைத்த கீர்த்தி சுரேஷ்...!
இந்த நிலைமைக்கு நயன்தாராதான் காரணம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
130 தங்க நாணயங்கள் கொடுத்த படக்குழுவினர்
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அப்படத்தில், நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தசரா படப்பிடிப்பின் கடைசி நாளில் 130 தங்க நாணயங்களை படக்குழுவினருக்கு பரிசாக கீர்த்தி சுரேஷ்க்கு வழங்கினார். இந்த தங்க நாணயங்களின் மொத்த மதிப்பு ரூ.70 லட்சமாகும்.
நயன்தாரா தான் காரணம்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் நயன்தாரா குறித்து பல தகவல்களை கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில், சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களில் ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள். இந்த கிரெடிட் நயன்தாரா மேடத்திற்குதான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர்தான் அந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்து வைத்தார்.
‘மாயா’ என்ற படத்திலிருந்து தான் அது மாறத் தொடங்கியது. நயன்தாரா அதை செய்ததால்தான் மற்ற நடிகைகளுக்கும் இதுபோன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நயன்தாராவால் தான் நிறைய பெண்கள் தங்களால் சிறந்த ஒன்றை கொடுக்க முடியும் என்று நினைத்தார்கள் என்றார்.