மாதம்பட்டி ரங்கராஜுக்கு சாபம் கொடுத்த ஜாய் கிரிசில்டா! என்ன சொல்லிருக்காங்கன்னு பாருங்க
பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார் என்று பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் 2வது மனைவி ஜாய் கிரசில்டா சாபம் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
முதல் மனைவியுடன் வாழும் போதே அண்மையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது.
இந்த சர்சைக்கும் மத்தியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
மாதப்பட்டி யாருடன் வாழுகின்றார் என்பதே குழப்பமாக இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, கர்ப்பமாக்கி விட்டதாகவும், கருகலைப்பு செய்ய தூண்டியதாகவும் ஜாய் கிரிஸில்டா சில தினங்களுக்கு முன்னர் பொலிஸ் புகார் கொடுத்தார்.
அதன் பின்னர் இந்த பிரச்சினை குறித்து பலரும் இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றர்.
இந்நிலையில், ஜாய் கிரசில்டா மாதம்பட்டிக்கு சாபம் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

