எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு ஒரு பாம்பு... அதிசய கிராமம்- இதன் பின்னணி என்ன?
இந்தியாவின் ஒரு கிராமத்தில் பாம்புகளை ஒவ்வொரு வீட்டிலும் செல்லப்பிராணிகளாக வளர்த்து அதற்கென அந்த கிராமத்தில் கோவில் கட்டி வழிபடும் வழக்கம் உள்ளதாம்.
பாம்பு கிராமம்
இந்த பாம்பு கிராமத்தின் பெயர் ஷெட்பால். இங்கு பாம்புகளை ஊர்வனமாக பார்க்காமல் மரியாதைக்குரிய விருந்தினர்களாக கருதுகிறார்கள்.
இங்கு நாக பாம்புகளை வீட்டிற்குள் வரவேற்பது ஒரு வழக்கமாக உள்ளது. மேலும் இவை புனித சின்னங்களாக மதிக்கப்படுகின்றன. இது தலைமுறைகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த கிராமத்தில் நாய்கள் குரைக்கும் சத்தமோ அல்லது வேறு மிருகங்கள் இருப்பதையோ நம்மால் பார்க்க முடியாது.
ஆனால் இந்த கிராமத்தில் எங்கு பார்த்தாலும் பாம்புகள் கூடு கட்டி வாழ்வதை பார்க்கலாம். எனவே இந்த கிராமம் "இந்தியாவின் பாம்பு கிராமம்" என அழைக்கப்படுகிறது. இந்த நிலைக்கு ஒரு காரணமும் உள்ளது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஆபத்தான உயிரினத்திற்கு கொஞ்சம் இடம் கொடுக்கப்பட்டுகிறது. பாம்புகளும் மக்களும் இங்கு ஒன்றாக வாழ்கிறார்கள்.
இங்கு குழந்தைகள் கூட ஒரு பயம் இன்றி பாம்புகளுடன் விளையாடுகின்றனர். மிகவும் சுவாரஸ்யமான விஷயம். இருந்தும் இந்த கிராமத்தில் ஒருபோதும் மக்கள் பாம்புகளால் பாதிக்கப்படுவதில்லை. இது என்னடா மர்மம் என்பது போல இருக்கும்.
இதற்கான காரணம் மிகவும் தனித்துவமாக உள்ளது. அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த கிராம மக்கள் நாகப்பாம்புகள் இந்து மதத்தில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவருனான சிவபெருமானின் அம்சம் என்றும், அவர் எப்போதும் கழுத்தில் பாம்புடனே இருப்பதாகவும் நம்புகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை பாம்புகள் வெறும் ஊர்வன மட்டுமல்ல, வழிபாட்டிற்கும் மரியாதைக்கும் தகுதியான தெய்வீக உயிரினங்கள் கருதப்படுகின்றன.
பாம்புகளுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் இந்த கிராமத்தில் இருக்கிறது. இங்கு பாம்புகளை கௌரவிக்க சடங்குகள் செய்யப்படுகின்றன. இது பாம்புகளுக்கும் பழக்கபட்ட ஒரு விஷயம் என்பதால் பாம்பு யாரையும் கடிக்காத அதிசயமாக உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |