அந்தரத்தில் வளரும் உருளைக்கிழங்கு, தண்ணீரில் விளையும் தக்காளி! இந்த முறைகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
உருளைக்கிழங்கை அந்தரத்திலும், தக்காளியை தண்ணீரிலும் விளையச் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
எவ்வித மண்ணும் இன்றி பயிர்ச் செய்கையில் ஈடுபடக்கூடிய ஆறு வழிகள் உள்ளன.
உங்களுக்கென தனியான ஓர் வீட்டுத் தோட்டத்தை உருவாக்க விரும்புகின்றீர்களா?
எனினும் அது மரபு ரீதியிலான தோட்டமாக இருக்க்க் கூடாது என நினைப்பவரா நீங்கள்?
இதோ ஆறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மண் இன்றி மரக்கறி செய்கை செய்யும் முறைமை?
Aeroponic Farming
சிறிய சாடிகளில் விதைகள் வைக்கப்படுகின்றன. சாடியின் ஒரு முனை சூரிய ஒளி படுமாறு வைக்கப்படுவதுடன் மறுபுறம் ஊட்டசத்துடன் கூடிய நீர் பாய்ச்சப்படுகின்றது.
Camille Boylan
Hydroponics
மண்ணில்லா வேளாண்மை எனப்படும் இந்த முறைமை மண் இன்றி பயிருக்குத் தேவையான கனிம வளங்களை வழங்கி செய்யும் விவசாய முறைமையாகும்.
இதில் பயிருக்கு தேவையான தட்பவெட்ப நிலை மற்றும் பீ.எச் அளவு என்பன கட்டுப்படுத்தப்படுகின்றது.
ஓர் நீர்க்குவளை மற்றும் தாவர ஊட்டச்சத்து என்பனவே உங்களுக்கு தேவையானவையாகும்.
மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இந்த தாவரங்கள் மண்ணை விடவும் வேகமாக வளர்கின்றன.
Kratky Method
மண்ணில்லா கராட்கீ விவசாய செய்கையின் மூலம் பயிர்களுக்கான ஊட்டச்சத்துக்களை கட்டுப்படுத்தி விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த முறையில் தாவரத்தின் வேர் முழுமையாக ஊட்டச்சத்துக்கள் அடங்கிய நீரில் மூழ்கியிருக்கும்.
இதனை தொடர்ச்சியாக செய்யும் போது வேர்கள் பலம்பெறுகின்றன.
Aquaponics
அக்குவாபோனிக்ஸ் முறையானது மீன் வளர்ப்பதுடன் செடிகளை பயிர்ச் செய்வதாகும்.
மீன்களை வளர்ப்பதற்காக உணவு வழங்கும் மீன்கள் அவற்றை உட்கொண்டு எஞ்சும் கழிவுகள் ஊடாக கிடைக்கும் ஊட்டச் சத்து நிறைந்த நீர் பயிர்களுக்கு பாய்ச்சுவதன் மூலம் இந்த பயிர்ச்சை மேற்கொள்ளப்படுகின்றது.
மீன்தொட்டியின் நீர் பயிர்களுக்கு செலுத்தப்படுகின்றது. நாற்று மேடையில் காணப்படும் பக்டீரியாக்கள் மீன் கழிவுகளை நைட்ரேட்டாக மாற்றி பயிர்கள் வளரச் செய்கின்றது.
Greenlab
Drip Hydroponics
இந்த தொழில்நுட்பமானது நீர் பம்பு ஒன்றின் ஊடாக தாவரங்களுக்கு போசனை பதார்த்தளை பாய்ச்சி அதன் ஊடாக வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும்.
எவ்வாறான பதார்த்தங்கள் எவ்வளவு தேவை என்பது இந்த செய்கையின் போது வரையறுக்கப்படுகின்றது.
இதில் எஞ்சிய ஊட்டச் சத்துக்கள் மீளவும் சேமித்து வைக்கப்பட்டு பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி காணப்படுகின்றது.
Deep Water Culture
இந்த முறையில் செடிகள் ஊட்டச் சத்து நிறைந்த நீரில் வைக்கப்படுவதுடன் தேவையான காற்று வழங்கப்படுகின்றது.
வரையறையற்ற வகையில் ஒட்சிசன் வழங்கப்படுவதனால் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன.
epicgardening