சர்க்கரை நோயாளி தினமும் வேப்பிலை சாறு குடிக்கலாமா? வெறும் வயிற்றில் பருகினால் என்ன நடக்கும்
வேப்ப இலைகள், ஒரு பாரம்பரிய சக்திவாய்ந்த மருந்தாக உள்ளன.
இவற்றின் ஆரோக்கிய நன்மைகள் பல நூற்றாண்டுகளாக இப்போதும் பேசப்படுகின்றன.
வேப்பிலையில் உள்ள கசப்பு தன்மை, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது.
இவற்றில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைத்து இரத்த சர்க்கரை உடனே அதிகரிக்காமல் இருப்பதில் இருந்தும் தடுக்கிறது.
அதிலும் ஒருவர் கசப்பான வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம்.
சர்க்கரை நோய்கான பானம்
இல்லாவிட்டால், 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 7 வேப்பிலைகளைப் போட்டு பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும்.
பிறகு இறக்கி வடிகட்டி குளிர வைத்து, காலை, மதியம் மற்றும் மாலையில் குடிப்பதன் மூலமும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.