குருவால் உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிகள் - ஜோதிடர் ஷெல்வி கணிப்பு
பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

குருப்பெயர்ச்சி
ஜோதிடத்தில் குரு மிக முக்கியமான கிரகமாகும். இவர் ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றிக்கொள்வார். இதன்போது தனது உச்ச ராசியான கடகத்துக்கு வருவார்.
இது எல்லா ராசிகளுக்கும் நன்மைகளை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு இது அதிக நன்மையை கொடுக்கும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
திருக் கணிதப்படி 2.6.2026 அன்று பெயர்ச்சி ஆகிறார். அவரது விசேஷ பார்வைகளான 5,7,9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளில் விழும்.
எனவே இந்த குருப்பெயுர்ச்சி எந்த ராசிகளுக்கு அதிக நன்மை கொடுக்கும் என்பதையும் அதனால் உண்டாகும் பலனையும் பதிவை படித்து தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்
- எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி மகிழ்வு தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. வரவுக்கு ஏற்ப செலவும் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம்.முதலீட்டில் அவசரம் வேண்டாம். அரசுப்பணியில் இருப்போர் அடக்கத்தைக் கையாளவது நல்லது. அரசியல் துறையினருக்கு மேலிடத்தின் ஆதரவால் பெருமை சேரும். கலைஞர்கள், படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது நல்லது. வாகனப் பழுதினை உடனுக்குடன் சீர் செய்வது நல்லது. தூக்கமின்மை, அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு, வாழ்வை ரம்யமாக்கும்.
ரிஷபம்
- திட்டமிட்டு செயல்பட்டால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் தடைபடலாம். அது நன்மைக்கே என்பதை உணருங்கள். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் கைகூடும். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். புதிய உறவுகளிடம் வீண் கடுமை வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து லாபம் தரும். செய்யும் தொழிலில் நிதானமே ஏற்றம் தரும்.பங்குவர்த்தகத்தில் பெரும் முதலீடு வேண்டாம். அரசுத்துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் வரும். அரசியலில் இருப்போர்க்கு ஆதரவு நிலைக்கும். அனுபவம் மிக்கவர்களிடம் சர்ச்சைகள் வேண்டாம். கலைஞர்கள், படைப்புது துறையினருக்கு திறமை பளிச்சிடும். மாணவர்கள் மறதிக்கு இடம்தர வேண்டாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, ரத்த நாள உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு, நன்மைகள் சேர்க்கும்.
மிதுனம்
- உழைப்பினால் உயர்வுகள் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் தளராத உழைப்பினால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடனிருக்கும் யாருடனும் வீண் உரசல் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். கடினமான வார்த்தைகளால் அதை விரட்டிவிட வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்காள். பழைய கடன்களை நேரடியாகச் சென்று பைசல் செய்யுங்கள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. அரசுத்துறையில் இருப்போர்க்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கிட்டும் அறிகுறிகள் தெரியத்தொடங்கும்.அரசியலில் இருப்போர் நாவடக்கத்தால் நல்ல பெயர் வாங்கலாம். பொது இடத்தில் நிதானம் முக்கியம். கலைஞர்கள், படைப்பாளிகள் படைப்பு சார்ந்த ரகசியங்களைப் பிறரிடம் பகிராமல் இருப்பது நல்லது. மாணவர்கள் அதிகாலைப் படிப்பை வழக்கமாக்குவது நல்லது. இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கண்கள், முதுகு, அலர்ஜி உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு, மகிழ்ச்சி சேர்க்கும்.
கடகம்
- உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.. அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பணி தேடுவோர்க்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்ப சூழல் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதில் நேரான கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாகும்.அரசுத் துறையில் இருப்பவர்கள் கையெழுத்து இடும் சமயங்களில் கவனமாக இருப்பது முக்கியம். கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் யாருக்கும் வாக்குறுதிகள் தரவேண்டாம். மேலிடத்திடம் வீண் ரோஷமும் கூடாது. கலைஞர்கள், படைப்பாளிகள் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் சகவாச தோஷத்தை உடனே உதறுங்கள். இரவில் அதிக நேரம் விழித்திருக்க வேண்டாம்.கழுத்து, மூட்டு, பல் உபாதைகள் வரலாம். அனுமன் வழிபாடு, ஆனந்தம் சேர்க்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).