ஜீவானந்தத்தை வலைபோட்டு தேடும் குணசேகரன்..! காதலரை காட்டிக் கொடுப்பாரா ஈஸ்வரி- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ஜீவானந்தத்தை வலைபோட்டு தேடும் குணசேகரனிடம் அவர் யார் என்கிற உண்மையை ஈஸ்வரி கூறுவாரா இல்லையா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
ஒவ்வொரு வாரமும் டி ஆர் பி-யில் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் விறுவிறுப்பான தருணங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் ஆண்களின் ஆதிக்கம் கொண்ட வீட்டில் குணசேகரனுக்கு அப்பத்தா பங்கின் மூலம் மிகப் பெரிய ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தெரிந்து கொண்ட குணசேகரன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் போது அவரை நான்கு பேர் அடித்து தூக்கி வீசிவிட்டார்கள்.
இப்படியொரு நிலையில் குணசேகரன் தன்னுடைய கையொன்று விலங்க வில்லை என நாடகம் போட்டு வீட்டிலுள்ளவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
காதலனை காட்டி கொடுப்பாரா ஈஸ்வரி?
இந்த நிலையில் இப்படி திட்டம் போட்டு ஏமாற்றிய ஜீவானந்தம் யார் என கதிர், ஜனனி, சக்தி என அணைவரும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
எந்தவிதமான அறிவிப்பு இன்றி இது போன்ற காரியங்களை செய்ய ஜீவானந்ததிற்கு யார் அந்த அதிகாரித்தை கொடுத்தது என ஈஸ்வரி புலம்பும் போது, அப்போது தான் ஈஸ்வரியின் முன்னாள் காதலன் தான் இந்த ஜீவானந்தம் என தெரியவருகின்றது.
ஆனால் இந்த விடயம் ஈஸ்வரி - ஜீவானந்தம் ஆகிய இருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது.
அத்துடன் ஜீவானந்தம் பேசியதை கேட்ட ஈஸ்வரி கிணற்றிற்கு அருகில் கண்கலங்கியப்படி அமர்ந்து பழைய நினைவுகளை மீட்டு பார்க்கிறார்.
இவர்களின் காதல் விவகாரம் குணசேகரனுக்கு தெரிய வரும் போது கண்டிப்பாக பெரிய சம்பவம் ஒன்று இருக்கின்றது. அவர்கள் கண்டுபிடிக்கும் முன்னர் இவரே சென்று கூறுவாரா? என ரசிகர்கள் பயங்கரமான குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |