சுகர் லெவலை சுலபமாக குறைக்க வேண்டுமா? வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க போதும்
ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் காலையில் வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்றைய அவசர உலகில் நீரிழிவு நோய் ஒரு பொதுவான நோயாக இருக்கின்றது. ஆனால் தீவிரமான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
இதற்கு உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீரீழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியம்.
நாம் சாப்பிடும் உணவுகளும், உட்கொள்ளும் பானங்களும் நமது உடலின் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கின்றன.
குறிப்பாக காலை உணவும், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் உணவு வகைகளும் ஆரோக்கியமானவையாகவும், சர்க்கரை அளவை அதிகரிக்காதவையாகவும் இருக்க வேண்டும்.
சில குறிப்பிட்ட உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்து கொள்வோம்.
சியா விதைகள்
அதிக நார்ச்சத்து கொண்ட சியா விதைகளை, இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் உட்கொண்டால், இதன் நார்ச்சத்து, செரிமான முறையை மெதுவாக்கி குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது.
இதனால் திடீர் ரத்த சர்க்கரை அதிகரிப்பு தடுக்கப்படுவதுடன், உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிப்பதுடன், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கும்.
இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுவதுடன், ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
தேங்காய் எண்ணெய் அல்லது உலர்ந்த தேங்காய்
தேங்காயில் மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள் (MCTs) உள்ள நிலையில், இது இரத்த சர்க்கரையை அதிகரிக்க அனுமதிக்காது.
நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் வர்ஜின் தேங்காய் எண்ணெய் அல்லது சில உலர்ந்த தேங்காய் துண்டுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும். இவை உடலின் வளர்சிதை மாற்றத்தையும் ஆரோக்கியமாக வைக்கின்றது.
ஊறவைத்த பாதாம்
புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் இவற்றினைக் கொண்ட பாதாம், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
கருப்பு திராட்சை
கருப்பு திராட்சை அல்லது கொடிமுந்திரி இவற்றில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளதுடன், செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது.
இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கின்றது. ஆனாலும் அவற்றை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |