காலே இல்லாமல் பிறந்த ஆட்டு குட்டி! கண்ணீர் சிந்திவிட்டு அடுத்த நொடியே வளர்ப்பு பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
ஸ்ரீபெரும்புதூர் அருகே நாலு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டியை குழந்தை போல் பாலூட்டும் பெண்ணின் செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் ஊராட்சியில் வசிப்பவர் மூதாட்டி வசந்த மகாலிங்கம்.
இவரது கணவர் மற்றும் மகன்கள் இறந்த நிலையில் கால்நடை வளர்ப்பதை தொழிலாகக் கொண்டு தனது ஜீவ அம்சத்தை கடத்தி வருகிறார்.
இந்த வயதிலும் நேர்மையுடன் வாழ எண்ணி மூன்று ஆடுகளை வளர்த்து வருகின்றார்.
அதில் ஒரு ஆடு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது.
இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டிக்கு அதிர்ச்சியும் காத்திருந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த நபர்கள் இது குறித்து விசாரித்த போது, ஆடு ஈன்ற போது ஒரு ஆட்டுக்குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் நடந்த நிலையில் மற்றொரு ஆட்டு குட்டி நான்கு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்ததாக கூறி அழுதுள்ளார்.
நெகிழ வைத்த பெண்
இருப்பினும், சிறிது நேரத்திலேயே தனது மனதை தேற்றிக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் இருந்து குழந்தைகளுக்கு அளிக்கும் பால் ஊட்டியை பெற்று அந்த ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் மடியிலிட்டு பால் வழங்கிய காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் குறித்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.