ஒருத்தருக்கு ஏற்பட்ட கொரோனா - ஒட்டுமொத்த நகரத்திற்குமே லாக்டவுனை அறிவித்த சீனா!
கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல நாடுகளில் கட்டுப்பாடுகளை மீண்டும் தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.
அதேப்போல் தமிழத்திலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,280 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,06,257 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் லாக்டவுன்
இந்நிலையில், சீனாவில் உருவெடுத்த இந்த வைரஸ் ஆனது, தற்போது அங்கு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்கள் முன்னதாக கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சீனாவில், கொரோனா பாதிப்பு தினசரி 200 – 300க்குள் இருந்து வருகிறது. இதனிடையே, சீனாவின் வுகேங்க் நகரில் சமீபத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் நோய் பரவல் தடுப்பு நோக்கில் அந்நகரத்தை சேர்ந்த யாரும் வரும் வியாழக்கிழமை மதியம் வரை வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பால் சீன மக்கள் கதிகலங்கிய நிலையில், இந்த நடவடிக்கையால் அந்நகரத்தின் தொழில்கள் முடங்குவதுடன், மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.