மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா - முக்கிய நடவடிக்கையில் இறங்கிய சீனா
கொரோனா வைரஸ் ஆனது உலகில் முதன் முறையாக சீனாவில் இருந்து தான் பரவ ஆரம்பித்தது. அங்கிருந்து அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, என பல நாடுகளில் வைரஸ் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.
இதனிடையே, தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது.
மீண்டும் பரவல்
சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இது முந்தைய நாளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதன்படி இரண்டு ஆண்டுகளில் சீனா அதன் கடுமையான வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்கிறது.
ஊரடங்கு அமல்
இதுமட்டுமின்றி 19 மாகாணங்களில் ஓமிக்ரோன் மற்றும் டெல்டா வைரஸ் பரவுவதால் சீன அதிகாரிகள் ஷாங்காயில் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர்.
சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,466 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய சூழலின் படி அங்கு விரைவான ஊரடங்குகள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று பரவல் தோன்றியபோது வெகுஜன சோதனைகள் மூலம் அமல்படுத்தப்பட்ட கடுமையான பூஜ்ஜிய-கோவிட்' கொள்கையை பராமரித்து வருகிறது.