வெங்காய தோல் டீ குடித்தால் என்ன நடக்கும்? தீராத நோய்களுக்கு உடனடி தீர்வு - செய்து பாருங்க!
பொதுவாக நாம் சமையலுக்காக அதிகமான வெங்காயங்களை பயன்படுத்துவோம்.
இவ்வாறு பயன்படுத்தும் போது வெங்காயங்களினால் கிடைக்கப்படும் தோலை அகற்றி குப்பையில் போட்டு விடுவோம்.
ஆனால் இந்த வெங்காய தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
வெங்காயத்தோலில் வெளிப்புற அடுக்குகளில் ஃபிளவனாய்டுகள், குவெர்செடின் போன்ற தாவர கலவைகள் காணப்படுகிறது.
இதில் வைட்டமின் ஈ, பிபி, வைட்டமின் சி, கரோட்டீன்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
அந்த வகையில் வெங்காய தோலினால் என்ன நன்மைகள் இருக்கின்றது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
வெங்காய தோல் டீ பருகினால் என்ன நடக்கும்?
1. வெங்காயங்களினால் பெறப்படும் தோலில் குர்செடின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகியவை இருக்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் கட்டுபடுத்தப்படுகின்றது.
2. ஒவ்வாமை, மனச்சோர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட உதவியாக இருக்கின்றது.
3. கால் பிடிப்புகள் உள்ளவர்கள் வெங்காய தோலை கொதிநீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க விட்டு தேநீர் போன்று பருகி வந்தால் சில வாரங்களில் கால் பிடிப்புக்கள் நீங்கி விடும்.
4. வாரத்திற்கு இரண்டு தடவைகள் வெங்காய தோல் கலந்த தண்ணீரை குடித்தால் மாதவிடாய் சீராக வரும்.
5. இரவில் தூக்கம் வரவில்லையென்று கவலையாக இருக்கீங்களா? அப்போ வெங்காய டீயுடன் தேன் கலந்து குடித்து வர வேண்டும். நிம்மதியாக தூக்கம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
