கழுத்தில் தாலி ஏறியவுடன் பாக்கியலட்சுமி இனியா போட்ட பதிவு- வாழ்த்தித் தள்ளும் ரசிகர்கள்
கழுத்தில் தாலி ஏறியவுடன் பாக்கியலட்சுமி இனியா போட்ட பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவாகரத்து ஆன நிலையில், கோபி பாக்கியா வீட்டில் இருந்து வருகின்றார். இவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பாக்கியாவும் தனது தொழிலில் முன்னேறிச் செல்கின்றார்.
இதனிடையே இனியா- ஆகாஷ் காதல் விடயம் கோபிக்கு தெரியவந்த பின்னர் அதனை வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறி இருவரையும் கண்டித்து வைத்தார். அதன் பின்னர் செல்வி குடும்பத்தினருக்கும், பாக்கியலட்சுமி குடும்பத்தினருக்கும் சண்டை வெடித்தது. இவற்றையெல்லாம் பொறுமையாக கடந்து சென்ற இனியா படிப்பை முடித்து விட்டு வேலைக்கு சென்றார்.
கழுத்தில் தாலி ஏறியவுடன் இனியாவின் பதிவு

Super Singer: பிரியங்காவிற்கு பதில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய பிரபல நடிகை... பின்னணி பாடகியாகிய குழந்தைகள்
இந்த நிலையில், சுதாகர் என்பவர் அவருடைய வியாபார நோக்கத்திற்காக இனியாவை மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் போடுகிறார். இந்த விடயம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தாலும், அதனை பாக்கியலட்சுமி குடும்பத்தினர் முன்னர் காட்டிக் கொள்ளவில்லை.
திருமணம் முடிந்த கையோடு சுதாகர் பாக்கியாவின் ஹோட்டலை அவருடைய பெயருக்கு எழுதி வாங்கி விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன பாக்கியா, ஈஸ்வரி- கோபி இருவரிடமும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
காதலை மறந்து, இன்னொரு நபரை திருமணம் செய்து கொண்ட இனியா தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆரம்பித்து விட்டார். அதற்கான காட்சிகள் சீரியலில் அவ்வப்போது காட்டப்படுகின்றன.
சீரியலை போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இனியா கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |