Baakiyalakshmi: மகனுக்காக செய்த அநியாயம்... ராதிகாவிடம் மன்னிப்பு கேட்ட ஈஸ்வரி... குறித்த சீரியல் முடிகின்றதா?
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபி இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஈஸ்வரி ராதிகாவிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் கணவர் இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை வளர்க்கும் காட்சியாகும்.
இதற்கிடையே கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள பெண், பாக்கியாவின் தோழியாகவும் கதை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்கியா வீட்டிலிருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியேறிய ராதிகா கோபியை விவாகரத்து செய்துள்ளார்.
இதனால் கோபி மனமுடைந்து காணப்படுகின்றார். மீண்டும் பாக்கியாவின் வீட்டிற்கு வந்த ராதிகா அங்கு ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஈஸ்வரி தனது மகனுக்காக தான் செய்த தவறை நினைத்து ராதிகாவிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் ராதிகாவை ஆசீர்வாதமும் செய்துள்ளார்.
குறித்த சீரியலில் இந்த மாற்றத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் சீரியல் விரைவில் முடிவடைய போகின்றதா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |