த்ரிஷா பற்றி பேசிய குஷ்பு: என்ன சொல்லியிருக்கிறார்?
தற்போது விஜய் மற்றும் த்ரிஷா பற்றி பல விடயங்கள் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் நடிகை த்ரிஷா குறித்து நடிகை குஷ்பு பேசி உள்ளார். இதற்கு ரசிகர்கள் குழம்பி உள்ளனர்.

நடிகர் விஜய் த்ரிஷா
நடிப்பை விட்டு அரசியலில் இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தற்போது ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஒரு பக்கம் அரசியல் சர்ச்சை இருக்க மறு பக்கம் மறு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரச்சனைகளை தாண்டி வந்துகொண்டு இருக்கிறார்.
நடிகர் விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பு கொண்டுள்ளதால் அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.
இதன் பின்னர் நடிகை த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருந்தார் விஜய். இது இணையத்தில் பேசுபொருளாகி சர்ச்சையாக மாற்றப்பட்டது.

நடிகை குஷ்பு
அண்மையில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் குஷ்புவிடம், விஜய் மற்றும் த்ரிஷா விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு குஷ்பு, “நாம் இருக்கும் காலத்தில் யாராவது ஒரு சின்ன விஷயம் செய்தால் கூட அதை வேறு விஷயத்துக்கு குற்றம் சாட்டி பேசுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள்.

விஜய், த்ரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நான் சந்தித்தவர்களில் அவர் மிகவும் மரியாதையான பெண், மிகவும் மென்மையான மனம் கொண்டவர்.
சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து பேசுபவர்களுக்கு த்ரிஷா பதில் கூற வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்”.
இதற்க ரசிகர்கள் அப்போ குஷ்பு சொல்வது உண்மைதானோ என கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் குழம்பியவாறு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |