மற்றவர்கள் குறை கூறுவதில் கில்லாடிகள் இந்த ராசியினர் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!
பொதுவாகவே மனிதர்களுக்கு மற்றவர்களை பற்றி சிந்திக்கும் குணம் மற்றும் அவர்களின் செயல்களை கவனித்து விமர்சிக்கும் குணம் இருப்பது இயல்பான விடயம் தான்.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பற்றி அளவுக்கு அதிகமான விமர்சனம் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

குறிப்பாக இவர்களின் கவனம் மற்றவர்களின் செயல்களிலும், நடத்தைகளிலும் இருக்கும் குறைகளை கண்டுப்பிடித்து எதிர்மறையாக விமர்ச்சிப்பதில் தான் இருக்குமாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதீத நேர்த்திக்கும், முழுமைத்தன்மைக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவர்களிடம் இருக்கும் இந்த குணம் மற்றவர்கள் செய்யும் சின்ன சின்ன விடயங்களில் கூட குறைக்கண்டுப்பிக்க முக்கிய காரணமாக இருக்கும். அதனால் இவர்கள் அதிகமான விமர்ச்சிக்கின்றார்கள்.
அனைத்து விஷயங்களும் எப்போதும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைக்கும் இவர்களின் குணத்தை மற்றவர்களிடம் தேடுவதே இவர்களின் இந்த நடத்தைக்கு காரணமாகின்றது. இவர்கள் சிறிய தவறுகளுக்கும் விசித்திரமாக எதிர்வினையாற்றுவார்கள்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் பிறப்பிலேயே ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும், கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்
மற்றவர்கள் சோம்பேறியாக இருப்பதையோ அல்லது நேரத்தை வீணடிப்பதையோ காணும் பொது அவர்கள் யாராக இருந்தாலும், கடுமையாக திட்டுவார்கள். அல்லது அவர்கள் பற்றி மற்றவர்களிடம் மோசமாக விமர்ச்சிப்பார்கள்.
அவர்கள் தங்களுக்கென்று உயர்ந்த தரநிலைகளை வைத்திருப்பதால், அப்படி மற்றவர்கள் இல்லாத போது இவர்கள் ஏமாற்றமடைவதே இவர்களின் விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக அமைதியை விரும்புபவர்களாக அறியப்படுகின்றார்கள். இவர்கள் வாழ்வில் எா்போதும் சமநிலை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் முன்னிலையில, யாராவது பொருத்தமற்ற ஆடை அணிந்திருந்தாலோ அல்லது தவறாக நடந்துகொண்டாலோ, உடனே அவர்களை பற்றி எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுக்கத்தை மதிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஏதேனும் ஒன்று தங்களுக்குச் சரியாகத் தோன்றவில்லை என்றால், அதைப்பற்றியே மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது இவர்களின் முக்கிய குணமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |